Published : 27 Oct 2025 11:23 AM
Last Updated : 27 Oct 2025 11:23 AM

பிரபாஸ் படத்தில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஏன்? - இயக்குநர் ஹனு ராகவபுடி விளக்கம்

‘சீதா ராமம்’ இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஃபவுஸி’. இந்த பான்-இந்தியா படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.

அதில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் ஹனு ராகவபுடி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்​போது, “நாங்​கள் திட்​ட​மிட்டு தான் சமஸ்​கிருத ஸ்லோகங்​களை பயன்​படுத்​தினோம். போர்​வீரனைப் பற்​றிய இந்​தக் கதைக்கு அது ஆழமான பொருள் தரு​வ​தால் பயன்​படுத்​தி​யுள்​ளோம். மற்​றபடி இது புராணக் கதையை அடிப்​படை​யாகக் கொண்​டதல்ல. பகவத்​கீதையி​லிருந்து நாங்​கள் எடுத்​துக் கொண்​டது வெறும் தத்​துவ ரீதி​யான ஊக்​கம் மட்​டுமே.

‘ஃபவுசி’ என்​பது மனித உணர்​வு​கள், தேசப்​பற்று மற்​றும் பிரிட்​டிஷ் ஆட்​சிக் காலத்​தில் இருந்த சமூக-அரசி​யல் பதற்​றங்​களை மைய​மாகக் கொண்ட அழுத்​த​மான அதிரடி டிரா​மா. இன்​றும் உலகள​வில் அதே​போல் எதிரொலிக்​கும் உண்​மை​களை இப்​படம் பேசும். படத்​தில் பிர​பாஸ் ஒரு பெரிய வீர​ராக நடிக்​கிறார்.

‘கர்​ணன் பாண்​ட​வர்​களு​டன் சேர்ந்து இருந்​தால் மகா​பாரதப் போர் எப்​படி மாறி​யிருக்​கும்?’ என்ற சிந்​தனை தான் இந்​தக் கதை​யின் மையக் கரு. பிரிட்​டிஷ் கால பின்​னணி​யில் நடக்​கும் இந்​தக் கதை​யில் பிர​பாஸ் பல பரி​மாணங்​களு​டன் அசத்​தலான நடிப்பை வெளிப்​படுத்தி வரு​கிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x