Published : 12 Oct 2025 03:14 PM
Last Updated : 12 Oct 2025 03:14 PM
அல்லு அர்ஜுன் படத்தில் பார்வையாளர்கள் பார்க்காததை வழங்கவிருப்பதாக இயக்குநர் அட்லி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் தனது அணியினர் விளையாடும் போட்டியினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அட்லி. அப்போது அவர் அளித்த பேட்டியில், அல்லு அர்ஜுனை வைத்து இயக்கி வரும் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில் அட்லி, “அல்லு அர்ஜுன் சார் படம் திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அப்படத்தின் ஜானர் என்பது புதிது. ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய படங்களின் மூலம் கிடைத்த ரசிகர்களின் அன்பு தான் இப்படத்தினை இயக்க உதவியது.
இந்திய கலைஞர்களுக்கு நிகராக ஹாலிவுட் கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறேன். இப்படம் அவர்களுக்கும் சவாலாக இருக்கிறது. இதுவரை பார்க்காத ஒன்றை பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளோம். ஏனென்றால் இப்படத்துக்கு உதாரணம் என்றெல்லாம் இதற்கு முன்பு எந்தவொரு படமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார் அட்லி.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “AA22XA6”. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன், மிருணாள் தாகூர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு முழுக்கவே மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படம் எப்போது வெளியிடு என்பது இன்னும் திட்டமிடப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT