Last Updated : 06 Aug, 2025 11:54 AM

 

Published : 06 Aug 2025 11:54 AM
Last Updated : 06 Aug 2025 11:54 AM

’தி ராஜா சாப்’ வெளியீடு எப்போது? – தயாரிப்பாளர் விளக்கம்

பிரபாஸ் நடித்துவரும் ‘தி ராஜா சாப்’ வெளியீடு எப்போது என்பதற்கு தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபாஸ் நடித்து வரும் ‘தி ராஜா சாப்’ படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. ஆனால், டிசம்பர் 5-ம் தேதி வெளியீடு என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. முன்னதாக பட வெளியீடு திட்டமிடப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டிசம்பர் 5-ம் தேதி வெளியீடும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பது தயாரிப்பாளரின் பேட்டி மூலம் தெளிவாகிறது.

’தி ராஜா சாப்’ படத்தின் தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத், “தெலுங்கு வியாபார நிபுணர்கள் ஜனவரி 9-ம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். அதே சமயத்தில் டிசம்பர் 5-ம் தேதி வந்தால் நன்றாக இருக்கும் என்று இந்தி வியாபார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், இன்னும் பாடல்கள் மற்றும் சில காட்சிகள் படப்பிடிப்புக்கு இருக்கிறது.

இப்போது 4:30 மணி நேரக் காட்சிகள் இருக்கின்றன. அதை 2:45 மணி நேரமாக குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபரில் முழுமையாக தயார் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பணிபுரிந்து வருகிறோம். இதன் 2-ம் பாகமும் இருக்கும். அக்கதை இதன் தொடர்ச்சியாக இருக்காது. மல்டிவர்ஸ் பாணியில் வித்தியாசமான கதைக் கொண்டதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் டிசம்பர் 5-ம் தேதி வெளியீடு சந்தேகம் தான் என்பது தெளிவாகிறது.

ஏனென்றால் பிரபாஸுக்கு தெலுங்கு திரையுலகின் வியாபாரம் மிகவும் முக்கியம். இதனால் படம் ஜனவரி வெளியீட்டுக்கு ஒத்திவைக்கப்படும் என்பது உறுதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x