Published : 29 Jul 2025 09:51 AM
Last Updated : 29 Jul 2025 09:51 AM

‘லூசிஃபர் 3’ பற்றி வதந்தி: பிருத்விராஜ் தரப்பு விளக்கம்

நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம், ‘லூசிஃபர்’. இதில் மோகன்லால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இது, 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மலையாள சினிமா வரலாற்றில் ரூ.200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘எல் 2 : எம்புரான்’ என்ற பெயரில் உருவானது. பிருத்விராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய காட்சிகள் இடம்பெற்றதால் சர்ச்சையை சந்தித்தது.

இதன் மூன்றாம் பாகமான ‘எல் 3: அஸ்ரேல்’ படம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை நீருக்கடியில் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதை மறுத்துள்ள பிருத்விராஜ் தரப்பு, “லூசிஃபர் 3 படம் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. இது வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதி. போலியான ஐடி மூலம் தவறான வதந்தி வெளியாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x