Published : 18 Jun 2025 06:46 AM
Last Updated : 18 Jun 2025 06:46 AM

ரிஷப் ஷெட்டி உயிர் தப்பினாரா? - படக்குழு விளக்கம்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து, கடந்த 2022-ம் ஆண்டு வெளி​யான படம், ‘காந்​தா​ரா’. இந்​தப் படம் இந்​திய அளவில் பெரும் வரவேற்​பைப் பெற்​றது. இதையடுத்து இந்​தப் படத்​துக்கு முந்​தைய கதை​யாக ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ என்ற படம் இப்​போது உரு​வாகி வரு​கிறது. இதன் படப்​பிடிப்பு கடந்த சில நாட்​களுக்கு முன் ஷிவ​மோகா மாவட்​டத்​தின் மாணி நீர்த்​தேக்​கத்​தில் நடந்​தது.

ரிஷப் ஷெட்​டி​யுடன் 30 பேர் கொண்ட குழு படப்​பிடிப்​புக்​காகச் சென்​ற​போது, படகு கவிழ்ந்​தது என்​றும் ஆழமற்ற பகு​தி​யில் கவிழ்ந்​த​தால் அதிர்​ஷ்ட​வச​மாக அனை​வரும் உயிர் தப்​பிய​தாக​வும் கேமரா உள்​ளிட்ட உபகரணங்​கள் நீரில் மூழ்கி சேதமடைந்​த​தாக​வும் செய்​தி​கள் வெளி​யானது. இதனால் படப்​பிடிப்பு நிறுத்​தப்​பட்​ட​தாக​வும் கூறப்​பட்​டது. ஆனால், படக்​குழு​வினர் இதை மறுத்​துள்​ளனர்.

இதுபற்றி இந்​தப் படத்​தின் நிர்​வாக தயாரிப்​பாளர் ஆதர்ஷ் ஜா கூறும்​போது, ‘‘ஒரு காட்​சி​யின் பின்​னணி​யில் ஒரு படகு இருக்க வேண்​டும் என்​ப​தற்​காகப் படமாக்​கினோம். பலத்த காற்று மற்​றும் மழை காரண​மாக, படகு கவிழ்ந்​தது. அதில் ரிஷப் ஷெட்டி உள்பட படக்​குழு​வினர் யாரும் இல்​லை. உண்​மை​யான படப்​பிடிப்பு நடந்த இடம், அந்த இடத்​தில் இருந்து தொலை​வில் இருந்​தது. அனை​வரும் பாது​காப்​பாக உள்​ளனர். படப்​பிடிப்பு திட்​ட​மிட்​டபடி தொடர்​கிறது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x