Published : 16 Jun 2025 08:21 AM
Last Updated : 16 Jun 2025 08:21 AM
கன்னட நடிகை ருக்மணி வசந்த், ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்ற படம் மூலம் கவனிக்கப்பட்டார். பின்னர் தமிழில் விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
தெலுங்கிலும் நடித்துவரும் இவர், இப்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். பிரம்மாண்ட ஆக்ஷன் படமான இதில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் உள்ளதாகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் ருக்மணி வசந்தை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ருக்மணி வசந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT