Last Updated : 04 Apr, 2025 11:47 AM

 

Published : 04 Apr 2025 11:47 AM
Last Updated : 04 Apr 2025 11:47 AM

மகேஷ் பாபு படத்துக்கு ராஜமவுலியின் புதிய முடிவு!

மகேஷ் பாபு படத்துக்காக ராஜமவுலி புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறார்.

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் தயாராகி வருகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவுமின்றி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தினை ஒரு பாகமாக மட்டுமே எடுக்க முடிவு செய்திருக்கிறார் ராஜமவுலி.

ஏனென்றால் பலரும் இரண்டு பாகங்களாக உருவாக்கி வருவதால், அதில் நாமும் இணைய வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். முன்னதாக ‘பாகுபலி’ படத்தின் மூலம் இரண்டு பாகங்கள் என்ற ட்ரெண்ட்டை உருவாக்கியதே ராஜமவுலி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ தயாராகி வருகிறது. இதனை ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிட ராஜமவுலி முடிவு செய்திருக்கிறார்.

இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலர் மகேஷ் பாபு உடன் நடித்து வருகிறார்கள். விரைவில் இதன் படப்பிடிப்புக்காக வெளிநாட்டு செல்ல படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 2026-ம் ஆண்டில் தான் இதன் படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x