Published : 17 Feb 2025 10:23 AM
Last Updated : 17 Feb 2025 10:23 AM

பழம்​பெரும் நடிகை கிருஷ்ணவேணி காலமானார்

பழம்​பெரும் நடிகை​யும் தயாரிப்​பாள​ருமான கிருஷ்ணவேணி, ஹைதரா​பாத்​தில் காலமானார். அவருக்கு வயது 103.

குழந்தை நட்சத்​திரமாக சினி​மா​வில் நடிக்கத் தொடங்கிய கிருஷ்ணவேணி, தெலுங்கு, தமிழில் சில படங்​களில் நடித்​துள்ளார். தமிழில், புது​மைப்​பித்தன் கதை, வசனம் எழுதி 1948-ம் ஆண்டு வெளியான ‘காமவல்லி’ படத்​தில் நாயகியாக நடித்​துள்ளார். 1939-ம் ஆண்டு மிர்​சாபுரம் ஜமீன், மேகா வெங்​கட்​ராமையா அப்பா ராவ் பகதூரை திரு​மணம் செய்​து​கொண்​டார்.

பின்னர் இருவரும் சென்னை​யில் ஷோபனாசாலா ஸ்டூடியோஸ் என்ற நிறு​வனத்​தைத் தொடங்கி, அதன் மூலம் தெலுங்கு படங்​களைத் தயாரித்து வந்தனர்.

பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ராம​ராவ், நடிகை அஞ்சலி தேவி, இசை அமைப்​பாள​ரும் பாடகருமான கண்டசாலா ஆகியோரை சினி​மா​வில் அறி​முகப்​படுத்​தி​ய​வர் கிருஷ்ணவேணி. ஹைத​ரா​பாத் ஃபிலிம் நகரில் வசித்து வந்த அவர், வயது ​மு​திர்வு தொடர்பான பிரச்​சினை​களால் பா​திக்​கப்​பட்​டிருந்​தார். இந்​நிலை​யில் நேற்று ​முன் தினம் ​கால​மானார். அவர் மறைவுக்​குத்​ தெலுங்​கு ​திரை​யுலகினர்​ இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x