Published : 08 Feb 2025 10:31 PM
Last Updated : 08 Feb 2025 10:31 PM
‘அகண்டா 2’ படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடிகர் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘அகண்டா 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லன் யார் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. தற்போது வில்லனாக ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போயபதி சீனு இயக்கத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘சர்ரைனோடு’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஆதி. அதனைத் தொடர்ந்து மீண்டும் போயபதி சீனு இயக்கத்தில் ‘அகண்டா 2’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
போயபதி சீனு - பாலகிருஷ்ணா இணைப்பில் வெளியான ‘அகண்டா’ படத்தின் முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் 2-ம் பாகம் உருவாகி வருவதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் நாயகியாக சம்யுக்தா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கும்பமேளாவில் தொடங்கப்பட்டது.
‘அகண்டா 2’ படத்தினை பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வனி வழங்க, 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. செப்டம்பர் 25-ம் தேதி வெளியீடு என்று படப்பூஜை அன்றே படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT