Published : 02 Feb 2025 04:50 PM
Last Updated : 02 Feb 2025 04:50 PM
ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘வார் 2’ படத்தினை முடித்துவிட்டு, மீண்டும் தெலுங்கு படமொன்றில் நடிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். பிரசாந்த் நீல் இயக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘சலார்’ படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதன்பின் ‘சலார் 2’ இயக்குவதாக இருந்தது. ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஜூனியர் என்.டி.ஆர் படத்தினை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.
ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படமாக உருவாகும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் ஹைதராபாத்தில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT