Published : 26 Jan 2025 03:58 PM
Last Updated : 26 Jan 2025 03:58 PM
ஒரு படத்தின் வெற்றியால் பல இயக்குநர்கள் ஐஸ்வர்யா ராஜேஷிடம் கதைகள் கூறி வருகிறார்கள். தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் மேம்பட்டுள்ளது.
தெலுங்கில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெளியான படம் ‘சங்கிராந்திக்கி வஸ்துணாம்’. இதில் வெங்கடேஷுக்கு நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் உலகளவில் ரூ.250 கோடியைத் தாண்டி வசூல் செய்து வருவதாக வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இப்படத்தினை தில் ராஜு தயாரித்திருந்தார்.
தற்போது இப்படத்தின் வெற்றியினால், பல்வேறு முன்னணி இயக்குநர்கள் ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்து கதைகள் கூறி வருகிறார்கள். நாயகி என்பதைத் தாண்டி குழந்தைக்கு அம்மாவாக நடித்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார். இந்த முடிவு தான் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்று தந்திருக்கிறது.
சம்பளத்தையும் அதிகப்படுத்தி விரைவில் அடுத்த படத்தையும் முடிவு செய்ய ஐஸ்வர்யா ராஜேஷ் திட்டமிட்டு இருக்கிறார். மேலும், இந்த வெற்றியினை தக்கவைத்துக் கொள்ள சரியான கதைகளையும் தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT