Published : 24 Jan 2025 08:31 PM
Last Updated : 24 Jan 2025 08:31 PM
‘அகண்டா 2’ படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக சம்யுக்தா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘அகண்டா 2’ படத்தின் படப்பிடிப்பு கும்பமேளாவில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆந்திராவில் கிராமம் ஒன்றில் சண்டைக் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறது. தற்போது இப்படத்தின் நாயகியாக சம்யுக்தாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.
முதல் பாகத்தில் பிரக்யா நடித்திருந்தார். அவருக்கு பதிலாக சம்யுக்தா ஒப்பந்தமாகி இருக்கிறாரா அல்லது இவர் வேறொரு கதாபாத்திரமா என்பது விரைவில் தெரியவரும். போயபதி சீனு இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த படம் ‘அகண்டா’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காட்சியமைப்புகள், ஹீரோயிசம், சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது. இதனை பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வனி வழங்க, 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. செப்டம்பர் 25-ம் தேதி வெளியீடு என்று படப்பூஜை அன்றே படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT