Published : 21 Jan 2025 09:01 AM
Last Updated : 21 Jan 2025 09:01 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் - சீசன் 8’ நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதில் மொத்தம் 24 பேர் கலந்து கொண்டனர்.
வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர்களின் வெளியேற்றங்கள் நடைபெற்றன. கடுமையான போட்டிகளுக்குப் பிறகு, முத்துக்குமரன், சவுந்தர்யா, பவித்ரா, விஷால், ரயான் ஆகியோர் ஃபைனலுக்கு தேர்வாகினர்.
விஜய் டிவி சேனல் தலைவர் ஆர். பாலச்சந்திரன் மற்றும் கிளஸ்டர் ஜியோ ஸ்டார் தலைவர் கிருஷ்ணன் குட்டியுடன் சேர்ந்து, நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி, ‘பிக்பாஸ் சீசன் 8’ டைட்டில் வின்னராக முத்துக்குமரனை அறிவித்தார். 2-வது இடத்துக்கு சவுந்தர்யா தேர்வானார். விஷால், பவித்ரா, ராயன் ஆகியோருக்கு அடுத்தடுத்த இடங்கள் கிடைத்தன. பிக் பாஸ் டைட்டில் வென்ற முத்துக்குமரனுக்கு ரூ.40 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT