Published : 14 Sep 2025 07:11 AM
Last Updated : 14 Sep 2025 07:11 AM

துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு என் மகள் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை: திஷா பதானி தந்தை விளக்கம்

பரெய்லி: உ.பி. பரெய்​லி​யில் இந்தி நடிகை திஷா பதானி​யின் வீடு உள்​ளது. நேற்று முன்​தினம் 2 மர்ம நபர்​கள், பதானி​யின் வீட்​டின் மீது துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பினர். இதில் வீட்​டில் இருந்த யாருக்​கும் பாதிப்பு ஏற்​பட​வில்​லை.

இந்த தாக்​குதலுக்கு ரோஹித் கோதாரா - கோல்டி பிரார் கும்பல் பொறுப்​பேற்​றுள்​ளது. ஆன்​மிக தலை​வர்​கள் குறித்து அவதூறு கருத்து தெரி​வித்​ததற்​காக இந்​தத் தாக்​குதலை நடத்​தி​ய​தாக அந்த கும்பல் தெரி​வித்​திருந்​தது.

இந்த சம்​பவம் குறித்து திஷா பதானி​யின் தந்தை ஜெக​திஷ் சிங் பதானி கூறும்​போது, “எனது மூத்த மகள் குஷ்பு பதானி​யின் (திஷா பதானி சகோ​தரி) கருத்து தவறாக புரிந்​து​கொள்​ளப்​பட்​டுள்​ளது. நாங்​கள் சனாதனிகள். சாதுக்​களை நாங்​கள் மதிக்​கிறோம். இந்த விவ​காரத்​தில் எங்​களுக்கு எதி​ராக சதி நடந்​துள்​ளது. துப்​பாக்​கி​யால் சுடும் அளவுக்கு என் மகள் எது​வும் அநாகரி​க​மாக பேச​வில்​லை. அனிருதா ஆச்​சார்யா பெண்​கள் குறித்து ஒரு கருத்து தெரி​வித்​தார். என் மகள் ஒரு கருத்து தெரி​வித்​தார். அனை​வருக்​கும் கருத்து சுதந்​திரம் உள்​ளது’’ என்​றார்.

திஷா பதானி​யின் சகோ​தரி குஷ்பு பதானி, கடந்த ஜூலை மாதம், அனிருதா ஆச்​சார்யா பெண்​களை வெறுக்​கும் வகை​யில் கருத்து தெரி​வித்​திருப்​ப​தாக குற்​றம் சாட்​டி​யிருந்​தார். ஆனால் இந்​தக் கருத்து ஆன்​மிக தலை​வர் பிரே​மானந்த் ஜி மகராஜை அவம​திக்​கும் வகை​யில் இருப்​ப​தாக செய்தி வெளி​யானது. இதற்கு குஷ்பு உடனடி​யாக மறுப்பு தெரி​வித்​திருந்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x