Published : 12 Aug 2025 06:44 AM
Last Updated : 12 Aug 2025 06:44 AM
விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ், கினிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த அனிமேஷன் படம் ஜூலை 25-ல் வெளியானது.
தெலுங்கு, இந்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வந்தது. இந்நிலையில் இந்தியில் மட்டும் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் இந்தப் படம் வசூலித்துள்ளது.
இந்தியில் ஒரு அனிமேஷன் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிப்பது இதுதான் முதன்முறை. மற்ற மொழிகளிலும் சேர்த்து இந்தப் படம் ரூ.210 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT