Last Updated : 28 Feb, 2025 06:15 PM

 

Published : 28 Feb 2025 06:15 PM
Last Updated : 28 Feb 2025 06:15 PM

நான் இருமுறை நிராகரித்த கதை ‘கண்ணப்பா’ - அக்‌ஷய் குமார் விவரிப்பு

நான் இரண்டு முறை ‘கண்ணப்பா’ வாய்ப்பை நிராகரித்தேன் என்று நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இதன் டீஸர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இப்படத்தின் சிவபெருமான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்‌ஷய் குமார் பேசும்போது, “முதலில், எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் இரண்டு முறை இந்த வாய்ப்பை நிராகரித்தேன். ஆனால், இந்திய சினிமாவில் பெரிய திரையில் சிவனை உயிர்ப்பிக்க நான் சரியான நபர் என்ற விஷ்ணுவின் உறுதியான நம்பிக்கை என்னை உண்மையிலேயே சமாதானப்படுத்தியது.

கதை சக்தி வாய்ந்தது, ஆழமாக நகரும், மேலும் தலைசிறந்த காட்சி மொழிப் படைப்பாக மாறியுள்ளது. இந்த நம்ப முடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்” என்றார்.

‘கண்ணப்பா’பாத்திரத்தில் நடித்துள்ள விஷ்ணு மஞ்சு “இந்தப் படம் எனக்கு ஒரு திட்டம் மட்டுமல்ல, இது ஒரு தனிப்பட்ட பயணம். நான் தற்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஜியோடெர்லிங்காக்களையும் பார்வையிடுகிறேன். கண்ணப்பாவின் கதையுடன் ஆழ்ந்த, ஆன்மிக பிணைப்பை உணர்ந்தேன். இது ஆத்மாவைத் தொடும் உறுதியான நம்பிக்கை மற்றும் தியாகத்தின் கதை.

இந்தப் பயணத்தில் அக்‌ஷய் குமார், மோகன்லால் மற்றும் பிரபாஸ் எங்களுடன் சேர்ந்து பயணித்திருப்பது எனக்கு மகத்தான பெருமையைத் தருகிறது. ஏனென்றால் பக்தி மற்றும் தெய்வீக சக்தியால் நிரப்பப்பட்ட இந்த கதையை நாங்கள் நம்புகிறோம், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நபரையும் அடைய வேண்டும். இது எல்லைகளை தாண்டி மனிதகுலத்தின் இதயத்துடன் பேசும் செய்தி” என்று தெரிவித்துள்ளார்.

முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை மோகன் பாபு பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். மார்ச் 1-ம் தேதி இணையத்தில் வெளியாகியுள்ளது ‘கண்ணப்பா’ படத்தின் டீஸர். ஏப்ரல் 25-ம் தேதி உலகமெங்கும் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x