Published : 05 Oct 2025 04:36 AM
Last Updated : 05 Oct 2025 04:36 AM

சர்வேயர், வரைவாளர் பதவிகளுக்கு அக்.13-ம் தேதி 5-வது கட்ட கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோ​பால சுந்​தர​ராஜ் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு:

தமிழ்​நாடு நிலஅளவை பதிவேடு​கள் சார்​நிலை பணி​யில் அடங்​கிய நிலஅளவர் (சர்​வேயர்), வரை​வாளர் பதவி​களில் உள்ள காலி​யிடங்​களை நிரப்​புவதற்​கான 5-வது கட்ட சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு அக்​டோபர் 13-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்கு அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சம்​பந்​தப்​பட்ட தேர்​வர்​களுக்கு மட்​டும் குறுஞ்​செய்தி மற்​றும் மின்​னஞ்​சல் வாயிலாக தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​கள் அழைப்​பாணையை தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் இருந்து பதி​விறக்​கம் செய்​து​கொள்ள வேண்​டும். அழைப்​பாணை தபால் மூலம் அனுப்​பப்பட மாட்​டாது. சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அழைக்​கப்​படும் அனைத்து தேர்​வர்​களும் கலந்​தாய்​வுக்கு அனு​ம​திக்​கப்​பட்​டு, பணிக்கு தேர்வு செய்​யப்​படு​வர் என்​ப​தற்கு உறுதி அளிக்க இயலாது,. குறிப்​பிட்ட நாள் மற்​றும் நேரத்​தில் சான்​றிதழ் சரி​பார்ப்​பில் கலந்​து​கொள்ள தவறி​னால் மறு​வாய்ப்பு வழங்​கப்பட மாட்​டாது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

கீ ஆன்​ஸர் வெளி​யீடு: ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்வு (டிப்​ளமா மற்​றும் ஐடிஐ கல்​வித்​தகு​தி) தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ஏ.சண்​முகசுந்​தரம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், ‘ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​களில் (டிப்​ளமா மற்​றும் ஐடிஐ ) அடங்​கிய பதவி​களில் உள்ள காலி​யிடங்​களை நிரப்​புவதற்​கான தேர்​வு​கள் ஆகஸ்ட் 31 மற்​றும் செப்​டம்​பர் 7 முதல் 27-ம் தேதி வரை வெவ்​வேறு நாட்களில் நடத்​தப்​பட்​டன.

அதில் ஓஎம்​ஆர் வகை தேர்​வாக ஆகஸ்ட் 31-ம் தேதி நடை​பெற்ற தமிழ் தகு​தித்​தேர்​வு, திறனறிவு மற்​றும் மனக்​கணக்கு நுண்​ணறிவு தேர்​வுக்​கான உத்​தேச விடைகள் (கீ ஆன்​ஸர்) தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. மேல்​முறை​யீடு செய்ய விரும்​பும் தேர்​வர்​கள், அக்​டோபர் 7-ம் தேதி மாலை 5.45 மணிக்​குள் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தின் மூலம் ஆன்​லைனில் முறை​யீடு செய்​ய​லாம். அஞ்​சல் மற்​றும் மின்​னஞ்​சல் வழி​யாக பெறப்​படும் முறை​யீடு​கள் ஏற்​க​ப்​ப​டாது’ என தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x