Published : 03 Sep 2025 05:58 AM
Last Updated : 03 Sep 2025 05:58 AM

2,511 பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு இன்று கலந்தாய்வு

சென்னை: அரசுப் பள்​ளி​களில் 2,511 பட்​ட​தாரி ஆசிரியர்​கள் நியமனம் செய்​யப்பட உள்​ளனர். அதற்​கான பணிநியமன கலந்​தாய்வு சென்​னை​யில் இன்​றும், நாளை​யும் (செப்​.3, 4) நடை​பெறவுள்​ளது.

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யின்​கீழ் செயல்​பட்டு வரும் அரசுப் பள்​ளி​களில் 3,192 பட்​ட​தாரி ஆசிரியர்​கள், வட்​டார வளமைய ஆசிரியர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான அறி​விப்பு 2023 அக்​.25-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

அமைச்​சுப் பணி​யாளர்​களுக்கு 2 சதவீத ஒதுக்​கீடு போக தற்​போது 2,511 பட்​ட​தாரி ஆசிரியர்​களை நியமிக்க பள்​ளிக் கல்​வித் துறை நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது.

அதன்​படி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்​நிலைப்​பள்​ளி, திரு​வல்​லிக்​கேணி லேடி வெலிங்​டன் மேல்​நிலை பள்ளி உள்பட 6 இடங்​களில் இன்று (செப். 3) பணி நியமன கலந்​தாய்வு நடை​பெறவுள்​ளது. அதில் அறி​வியல் பாட ஆசிரியர்​களுக்கு மட்​டும் நாளை​யும் (வி​யாழன்) கலந்​தாய்வு நடை​பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x