Published : 30 Aug 2025 10:30 AM
Last Updated : 30 Aug 2025 10:30 AM

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வு நாளை நடைபெறுகிறது

சென்னை: டிஎன்​பிஎஸ்சி ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி​கள் தேர்​வில் டிப்​ள​மோ, ஐடிஐ கல்​வித் ​தகுதி உடைய பதவி​களில் 1,910 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​கான முதல்​கட்​டத் தேர்வு (தமிழ் தகு​தித் தேர்வு மற்​றும் பொது அறிவு தாள்) தமிழகம் முழு​வதும் நாளை (ஞாயிறு) காலை நடை​பெற உள்​ளது. ஓஎம்​ஆர் ஷீட் வடிவி​லான இத்​தேர்வை 76,974 பேர் எழுத உள்​ளனர்.

இதைத்​தொடர்ந்து 2-வது கட்ட தேர்வு (தொழில்​நுட்​பப்பாடங்​கள்) செப்​. 7 மற்​றும் 11 முதல் 15 வரை நடைபெறும். இத்​தேர்​வில் மைனிங் சர்​வேயர், மைனிங் உதவி மேலா​ளர், தொல்​லியல் துறை உதவிப் பொறி​யாளர், ஜவுளித் துறை உதவி தொழில்​நுட்ப உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்​சித் துறை பணி மேலா​ளர் மற்​றும் இளநிலை வரைவு அலு​வலர், நெடுஞ்​சாலைத் துறை இளநிலை வரைவு அலு​வலர், தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரிய சர்​வேயர், வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை இளநிலை தொழில்​நுட்ப அலு​வலர், அரசு போக்​கு​வரத்​துக்​கழக டெக்​னீஷியன்​கள், தமிழ்​நாடு மின்​பகிர்​மானக் கழக (மின்​சார வாரி​யம்) தொழில்​நுட்ப உதவி​யாளர் (எலெக்ட்​ரிக்​கல்) என 58 வித​மான பதவி​கள் இடம்​பெற்​றுள்​ளன. இதற்கு நேர்​முகத் தேர்வு எது​வும் கிடை​யாது. எழுத்​துத் தேர்​வில் அதிக மதிப்​பெண் பெற்​றாலே அரசு வேலை உறுதி என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x