Published : 03 Aug 2025 12:29 AM
Last Updated : 03 Aug 2025 12:29 AM

​​​​​​​கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் உதவியாளர் பணியிடம் நிரப்ப உத்தரவு: ஆகஸ்ட் 6-ம் தேதி அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வரும் 6-ம் தேதி வெளியாகிறது.

இதுதொடர்​பாக மண்டல இணைபதி​வாளர்​களுக்கு கூட்​டுறவு சங்​கங்​களின் பதி​வாளர் கே.நந்​தகு​மார் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: கூட்​டுறவு வங்​கி​கள், அனைத்து வகை​யான மத்​திய, தொடக்க கூட்​டுறவு சங்​கங்​களில் (பணி​யாளர் மற்​றும் மாணவர் கூட்​டுறவு பண்டக சாலைகள் தவிர) நேரடி நியமனம் மூலம் நிரப்​பப்பட வேண்​டிய உதவி​யாளர் காலி பணி​யிடங்​களை மாவட்ட ஆள்​சேர்ப்பு நிலை​யம் மூலம் தேர்வு செய்ய வேண்​டும். ஊழியர்​களுக்கு பதவி உயர்வு வழங்​கிய பிறகே, காலி பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும்.

அந்த வகை​யில், கீழ்க்​கண்ட கால​வரையறையை பின்​பற்றி பணி நியமன பணி​களை மேற்​கொள்ள வேண்​டும். மாவட்ட ஆள்​சேர்ப்பு நிலை​யம் வாயி​லாக நாளிதழ்​களில் ஆக.6-ம் தேதி பணி நியமனம் தொடர்​பான அறி​விப்பை வெளி​யிட்​டு, ஆகஸ்ட் 29-ம் தேதிக்​குள் விண்​ணப்​பங்​களை பெற வேண்​டும்.

அவற்றை பரிசீலித்​து, தகு​தி​யுள்ள விண்​ணப்​ப​தா​ரர்​களுக்கு செப்​டம்​பர் 5-ம் தேதி ஹால் டிக்​கெட் வழங்க வேண்​டும். செப்​டம்​பர் 12-ம் தேதி எழுத்து தேர்​வு, அக்​டோபர் 27-ல் முடிவு​கள் வெளி​யீடு, நவம்​பர் 12 முதல் 14 வரை நேர்​காணல் நடத்​தி, இறுதி முடிவு​களை நவம்​பர் 15-ம் தேதி வெளி​யிட வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x