Published : 31 Jul 2025 06:11 AM
Last Updated : 31 Jul 2025 06:11 AM

சர்வேயர், வரை​வாளர் பதவிகளுக்கு ஆக.19 முதல் 4-வது கட்ட கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சர்​வேயர், வரை​வாளர் பதவி​களுக்​கான 4-வது கட்ட அசல் சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு ஆகஸ்ட் 19 முதல் 22-ம் தேதி வரை நடை​பெறும் என டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோ​பாலசுந்​தர​ராஜ் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்​வில் நிலஅளவர் (சர்​வேயர்), வரை​வாளர் காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான 4-வது கட்ட அசல் சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு சென்​னை​யில் உள்ள டிஎன்​பிஎஸ்சி அலு​வல​கத்​தில் ஆகஸ்ட் 19 முதல் 22-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

இதற்கு அழைக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களின் பட்​டியல் தேர்வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்டு இருக்​கிறது. அழைப்​பாணையை இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்ள வேண்​டும். இதுகுறித்து சம்​பந்​தப்​பட்ட தேர்​வர்​களுக்கு எஸ்​எம்​எஸ் மற்​றும் மின்​னஞ்​சல் வாயி​லாக தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அழைப்​பாணை தனியே அஞ்​சல் மூலம் அனுப்​பப்பட மாட்​டாது. சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அழைக்​கப்​படும் அனை​வரும் கலந்​தாய்வுக்கு அனு​ம​திக்​கப்​பட்டு தேர்​வுசெய்​யப்​படு​வர் என்​ப​தற்கு உறுதி அளிக்க இயலாது. குறிப்​பிட்ட தேதி​யில் சான்​றிதழ் சரி​பார்ப்புக்கு வரத்​தவறி​னால் மறு​வாய்ப்பு அளிக்​கப்பட மாட்​டாது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x