Published : 25 Jul 2025 05:39 AM
Last Updated : 25 Jul 2025 05:39 AM

ஐடிஐ, டிப்​ளமோ மாணவர்​களுக்கு தனி​யார் துறை வேலை​வாய்ப்பு முகாம் நாளை நடை​பெறுகிறது

சென்னை: ஐடிஐ, டிப்​ளமோ தேர்ச்சி பெற்ற மாணவர்​களுக்கு தனி​யார் துறை வேலை​வாய்ப்பு முகாம், அம்​பத்​தூரில் நாளை நடை​பெறுகிறது. இதில், 100-க்​கும் மேற்​பட்ட முன்​னணி தனி​யார் நிறு​வனங்​கள் பங்​கேற்​க​வுள்​ள​தாக சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை​யின் கீழ் இயங்​கும், சென்னை மாவட்ட வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​ நெறி வழிகாட்டும் மையத்​தின் சார்​பில், அம்​பத்​தூர் தொழிற்​பேட்டை உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத்​தில் உள்ள வேலையளிப்பவர்களுக்கென தனி​யார்​ துறை வேலை​வாய்ப்பு முகாம், அம்​பத்​தூர் எய்மா வளாகத்​தில் நாளை (26-ம் தேதி) நடை​பெறவுள்​ளது. காலை 9 முதல் மாலை 3 மணிவரை முகாம் நடை​பெறும். அனு​மதி இலவசம்.

இந்த முகாமில், 100-க்​கும் மேற்​பட்ட முன்​னணி தனி​யார் துறை நிறு​வனங்​கள் பங்​கேற்​று, ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட காலிப் பணியிடங்​களுக்கு ஆள்​தேர்வு நடத்​துகின்​றனர். இதில் கலந்​து ​கொள்ள விருப்​ப​முள்ள ஐடிஐ, டிப்​ளமோ, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்​கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் முன்​ப​திவு செய்​து, பங்​கேற்று பயனடை​யு​மாறு சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த்​ ஜகடே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x