Published : 23 Jul 2025 05:24 AM
Last Updated : 23 Jul 2025 05:24 AM

சென்னை | புதிய துணை மருத்துவமனைகளில் 64 பணியிடங்கள்

சென்னை: பு​திய துணை மருத்​து​வ​மனை​களில் 20 மருத்​து​வர்​கள் உட்பட 64 பணி​யிடங்​களை உரு​வாக்க சுகா​தா​ரத்​துறை அனு​மதி அளித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில்​கு​மார் பிறப்​பித்த அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆவடி மற்​றும் திருப்​பூர் மாவட்​டம் வேலாம்​பாளை​யத்​தில் அரசு துணை மருத்​து​வ​மனை​கள் அமைக்க அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது.

அதன்​படி, ஆவடி​யில் ரூ.27 கோடி​யிலும், வேலாம்​பாளை​யத்​தில் ரூ.26.90 கோடி​யிலும் அதற்​கான கட்​டிடப் பணி​கள் மேற்​கொள்ள முடிவு செய்​யப்​பட்​டது. மேலும், ஆவடி​யில் ரூ.7.60 கோடி​யிலும், வேலாம்​பாளை​யத்​தில் ரூ.4.88 கோடி​யிலும் மருத்​துவ உபகரணங்களை நிறுவ திட்​ட​மிடப்​பட்​டது.

அதுதொடர்​பாக, புதிய பணி​யாளர் இடங்​களை உரு​வாக்​கு​வது குறித்​தும் மருத்​துவ சேவை​கள் மற்​றும் ஊரக நலப் பணி​கள் இயக்குநர் பரிந்​துரைகளை அனுப்​பி​யிருந்​தார்.

அதனை பரிசீலித்த அரசு, 20 மருத்​து​வர் பணி​யிடங்​கள், 35 செவிலியர் பணியிடங்கள் உட்பட 64 பணி​யிடங்​களை உரு​வாக்​க​வும், அவர்​களுக்​கான ஊதிய செல​வினங்​களுக்​கும் அனு​மதி அளிக்கப்பட்டுள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x