Published : 09 Jul 2025 05:30 AM
Last Updated : 09 Jul 2025 05:30 AM

​திருநங்​கைகளுக்​கான சிறப்பு வேலை​வாய்ப்பு முகாம்: சென்னையில் ஜூலை 11-ல் நடக்கிறது

சென்னை: வேலை​வாய்ப்​பற்ற திருநங்​கை, திருநம்​பியருக்​கான சிறப்பு தனி​யார் துறை வேலை​வாய்ப்பு முகாம் சென்​னை​யில் வரும் ஜூலை 11-ம் தேதி நடை​பெறவுள்​ள​தாக மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை​யில் உள்ள மாவட்ட வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்​டும் மையம் மற்​றும் மாவட்ட சமூக நலத் துறை சார்​பில் வேலை​யற்ற திருநங்​கை, திருநம்​பியருக்​கான தனி​யார் துறை வேலை​வாய்ப்பு முகாம் வரும் ஜூலை 11-ம் தேதி (வெள்​ளிக்​கிழமை) நடை​பெற உள்​ளது. சென்னை ஆட்​சி​யர் அலு​வலக வளாகத்​தில் காலை 10 முதல் மதி​யம் 2 மணிவரை நடை​பெறும் முகாமில் 50-க்​கும் மேற்​பட்ட தனி​யார் துறை நிறு​வனங்​கள் பங்​கேற்​கின்​றன.

இதில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்​பு​கள், ஐடிஐ, டிப்​ளமோ, பட்​டப்​படிப்பு படித்த திருநங்​கை, திருநம்​பியர்​கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் பதிவுசெய்து கலந்​து​கொள்​ளலாம். அதே​போல் https://forms.gle/ZZHqE7HF4ef6AjCx9 என்ற இணை​ய​வழி படிவத்​தி​லும் தங்​களது விவரங்​களை பூர்த்தி செய்து சமர்ப்​பிக்​க​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

முகாமில் கலந்​து​கொள்​ளும் வேலை​யளிக்​கும் நிறு​வனங்​களும், வேலை தேடும் திருநங்​கை, திருநம்​பிகளும் அதற்​காக கட்​ட​ணம் எது​வும் செலுத்​தத் தேவை​யில்​லை. வேலை​வாய்ப்​பற்ற திருநங்கை மற்​றும் திருநம்​பிகள் இந்த வாய்ப்பை பயன்​படுத்​திக் கொண்டு பயனடை​யு​மாறு சென்​னை ஆட்​சி​யர்​ ரஷ்மி சித்​​தார்​த்​ ஜகடே தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x