Published : 15 Apr 2025 06:50 AM
Last Updated : 15 Apr 2025 06:50 AM

தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு மே மாதம் கலந்தாய்வு

சென்னை: ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வுக்​கான (நேர்​காணல் இல்​லாத பதவி​கள்) நேரடி சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு மே மாதம் நடத்​தப்​படும் என டிஎன்​பிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது.

உதவி பொறி​யாளர், வேளாண் விரி​வாக்க அலு​வலர், வேதி​யிய​லா​ளர், மருந்து ஆய்​வாளர், அருங்​காட்​சியக காப்​பாட்​சி​யர் மற்​றும் உதவி காப்​பாட்​சி​யர், உட்பட பல்​வேறு பதவி​களில் 652 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​காக ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பப் பணி தேர்வு (நேர்​காணல் இல்​லாதது) கடந்த ஆண்டு அக்​டோபரில் நடத்தப்பட்டது. இத்​தேர்வை 90 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் எழு​தினர்.

தேர்வு முடிவு​கள் கடந்த பிப்​ர​வரி 20-ம் தேதி வெளி​யிடப்​பட்​டன. அதோடு தேர்​வர்​களின் மதிப்​பெண் மற்​றும் தரவரிசை​யும் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டன. இதைத்​தொடர்ந்​து, ஆன்​லைன் சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு தற்​காலிக​மாக அனு​ம​திக்​கப்​பட்​டோர் பட்​டியலை டிஎன்​பிஎஸ்சி மார்ச் 17-ம் தேதி பதவி​கள் வாரி​யாக வெளி​யிட்​டது.

டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை: தற்​போது பல்​வேறு பதவி​களுக்கு சரி​யான சான்​றிதழ்​களை​யும் பதிவேற்ற தேர்​வர்​களுக்கு ஏப்​ரல் 24 வரை அவகாசம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. அதற்குள் பதிவேற்ற தவறினால் அவர்​களின் விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​படும் என்​றும் டிஎன்​பிஎஸ்சி எச்​சரித்​துள்​ளது.

ஆன்​லைன் சரி​பார்ப்​புக்கு பொதுப்​பிரிவு இடங்​களுக்கு "ஒரு காலி​யிடத்​துக்கு 3 பேர்" என்று வீதத்​தி​லும், இடஒதுக்​கீட்டு பிரிவு இடங்​களுக்கு "ஒரு காலி​யிடத்​துக்கு 2 பேர்" என்ற அளவிலும், பணி அனுபவம் நிர்​ண​யிக்​கப்​பட்ட பதவி​களுக்கு "ஒரு காலி​யிடத்​துக்கு 5 பேர்" என்ற விகி​தாச்​சார அடிப்​படை​யிலும் ஆன்​லைன் சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு தேர்​வர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

நிர்​ண​யிக்​கப்​பட்ட காலக்​கெடு​வுக்​குள் உரிய சான்​றிதழ்​களை பதிவேற்​றம் செய்ய தேர்​வர்​கள் தவறி​னால், ஆன்​லைன் சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு 2-வது கட்ட பட்​டியல் வெளி​யிடப்​படும்.

அதைத்​தொடர்ந்து நேரடி சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்​வுக்கு அனு​ம​திக்​கப்​பட்ட தேர்​வர்​களின் பட்​டியல் வெளி​யிடப்​படும். இந்​நிலை​யில், ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி தேர்​வுக்​கான நேரடி சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு மே மாதம்​ நடத்​தப்​படும்​ என டிஎன்​பிஎஸ்​சி தெரிவித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x