Published : 05 Apr 2025 06:12 AM
Last Updated : 05 Apr 2025 06:12 AM
சென்னை: ராணுவத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள் வரும் ஏப்.10-ம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் ராணுவத்தில் 2025-26-ம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு https://www.joinindianarmy.nic.in/default.aspx என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு, இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் இணையவழியில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரர்கள் ஏப்.10-க்
குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தலை தொடர்ந்து, இணையவழி பொதுத் தேர்வு (சிஇஇ) நடத்தப்படும். கூடுதல் விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT