Published : 30 Dec 2021 06:45 AM
Last Updated : 30 Dec 2021 06:45 AM

பங்குச்சந்தையில் அன்னிய முதலீடு ரூ.51,000 கோடி

புதுடெல்லி

நடப்பு ஆண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை யில் மேற்கொண்ட முதலீடு ரூ.51 ஆயிரம் கோடியாகும். தொடர்ந்து 3-வது ஆண்டாக அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் ஸ்திரமற்ற சூழல் நிலவி வரும் சூழலில் தற்போது இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.

பொருளாதார வளர்ச்சி மீண் டும் பழைய நிலைக்குத் திரும்பி வருவதை உணர்ந்து அன்னிய முதலீட்டாளர்கள் (எப்பிஐ) பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். 2020-ல் பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு ரூ.1.03 லட்சம் கோடியாகவும் 2019-ல் ரூ.1.35 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்ககது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x