Published : 29 Aug 2019 10:56 AM
Last Updated : 29 Aug 2019 10:56 AM
சென்னை
சென்னையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து பவுன் 30 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை, தேவை, பங்குசந்தை மாற் றங்கள் ஆகியவற்றால் உள்ளூரில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற் பட்டுள்ளதால், தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் நேற்று திடீரென தங்கத்தின் விலையில் பெரிய அளவில் உயர்வு காணப்பட்டது. இதனால், சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.29 ஆயிரத்து 704க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 713-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 680-க்கு விற்கப்பட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்திருப்பதால், பெரும்பாலான நகைக் கடைகள் கூட்டமின்றி காணப்பட்டன. அடுத்த சில வாரங்களில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை நெருங்கும் என நகை கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.29 ஆயிரத்து 816-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 727-க்கு விற்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT