Published : 02 Aug 2019 03:55 PM
Last Updated : 02 Aug 2019 03:55 PM
சென்னை
தங்கம் விலை ஒரு பவனுக்கு இன்று ஒரே நாளில் 584 ரூபாய் அதிகரித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பும் குறையும் சூழல் உள்ளது. அமெரிக்க- சீனா வர்த்தக பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
இதுமட்டுமினறி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தக சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. சீனாவில் 27 ஆண்டுகளில் இல்லாத வர்த்தக மந்தநிலை நீடிக்கிறது. ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற வர்த்தக சுணக்கம் பெரிய அளவில் இருக்கிறது.
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது.
இதனால் உள்ளூர் ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்றம் ஒரளவு கட்டுக்குள் இருந்தது. தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 73 ரூபாய் உயர்ந்து 3383 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் விலை 584 ரூபாய் உயர்ந்து 27064 ஆக விற்பனை ஆகி வருகிறது. வெள்ளி ஒரு கிராம் விலை 44.30 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT