Published : 17 Nov 2025 07:16 AM
Last Updated : 17 Nov 2025 07:16 AM

தோல்வியில் கிடைக்கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்ளதாக இருக்கும்: ஜோஹோ இணை நிறுவனர் கருத்து

நகரத்தார் வர்த்தக சபை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற ‘லான்ச் பேட் - 2025’ என்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜோஹோ நிறுவன இணை நிறுவனர் குமார் வேம்புவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் நகரத்தார் வர்த்தக சபை தலைவர் உமா மெய்யப்பன். உடன், பொருளாளர் எம்.கண்ணன், வள்ளியம்மை பழனியப்பன், ஆர்.எம்.கதிரேசன் உள்ளிட்டோர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: தோல்​வி​யில் கிடைக்​கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்​ள​தாக இருக்​கும். எனவே, தோல்​வியைக் கண்டு துவளக் கூடாது என்று ஜோஹோ நிறு​வனத்​தின் இணை நிறு​வனர் குமார் வேம்பு கூறி​னார். நகரத்​தார் வர்த்தக சபை (என்​சிசி) மற்​றும் இளம் தொழில்​ முனை​வோரைக் கண்​டறிதல் (யெஸ்) அமைப்பு சார்​பில் ‘லான்ச் பேட் - 2025’ என்ற கருத்​தரங்​கம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், இளைஞர்​கள் குடும்​பத்​தினருடன் ஒருங்​கிணைந்து குடும்​பத் தொழிலையே கவனிப்​பதா அல்​லது சுய​மாக தங்​களுக்​கென ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​களை தொடங்​கு​வதா அல்​லது வேலைக்கு செல்​வதா என்​பது குறித்து விவா​திக்​கப்​பட்​டது. இந்​நிகழ்​வில் ஏராள​மான இளம் தொழில்​முனை​வோர் கலந்து கொண்​டனர்.

கருத்​தரங்​கில் பங்​கேற்ற கெவின்​கேர் நிறு​வனர் சி.கே.ரங்​க​நாதன் பேசும்​போது “இன்​றைய கால​கட்​டத்​தில் தொடங்​கப்​படும் ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் 95 சதவீதம் தோல்​வியை சந்​திக்​கின்​றன. இது இயற்​கை. நமது பிள்​ளை​கள் தொழிலில் ஈடு​படும்​போது சந்​திக்​கும் ஆரம்​ப
கட்ட தோல்வி​களை பெற்​றோர்​கள் பெரிதுபடுத்​தி, அவர்​களது தன்​னம்​பிக்​கையை இழக்​கச் செய்​யக்​கூ​டாது.

தொழில் செய்​வதற்கு வழி இல்​லை​யென்​றால்வேலைக்​குச் செல்​லலாம். ஆனால், நாட்​டுக்கு கடமை​யாற்ற வேண்​டும் என்று கரு​தி​னால், நிச்​ச​யம் தொழில் தொடங்க வேண்​டும். அதன் மூலம் நிறைய பேருக்கு வேலை​ வாய்ப்பு வழங்க வேண்​டும். அதுவே தேச சேவை” என்​றார். ஜோஹோ நிறு​வனத்​தின் இணை நிறு​வனர் குமார் வேம்பு பேசும்​போது, “தொழில் தொடங்​கு​வது என்​பது திட்​ட​மிட்ட, பகுத்​தறிவு சார்ந்த முடிவல்ல.

அது காதலில் விழு​வதைப்​போல உணர்​வுப்​பூர்​வ​மான அழைப்​பு. குடும்​பத் தொழிலில் இணைந்​தால் அது வாரிசு அரசி​ய​லாகி விடும். தனி அடை​யாளம் கிடைக்​காது போன்ற எண்​ணங்​கள் எல்​லாம் தேவை​யில்​லாதவை. சலுகை பெற்ற குடும்​பத்​தில் பிறந்​தது உங்​கள் தவறு கிடை​யாது. இருக்​கும் வாய்ப்​பு​களை பயன்​படுத்​திக் கொள்​ளவேண்​டும்.

விடா​முயற்​சிக்​கும், பிடி​வாதத்​துக்​கும் இடையே ஒரு மெல்​லிய கோடு​தான் உள்​ளது. வெற்றி பெற்​றால் உலகம் அதை விடா​முயற்சி என்று பாராட்​டும். தோல்​வியடைந்​தால் பிடி​வாதம் என்று சொல்​லும். தொழிலை நீங்​கள் உங்​களுக்​காக நடத்​துகிறீர்​கள். எனவே உங்​கள் மீது உங்​களுக்கு நம்​பிக்கை இருக்​க வேண்​டும். ஒவ்​வொரு நாளும் தோல்வி​கள் இருக்​கும்.

தோல்​வி​யில் இருந்து கிடைக்​கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்​ள​தாக இருக்​கும். பிடித்​த​மானதை செய்​யுங்​கள். நல்ல அனுபவங்​களைத் தேடி, வாழ்க்​கைப் பயணத்தை அமைத்​துக் கொள்​ளுங்​கள்” என்​றார். இந்​நிகழ்​வில், பிளாசம் பப்​ளிக் பள்ளி நிறு​வனர் அழகு.அழகப்​பன், அட்​வாண்​டேஜ் புட்ஸ் நிறுவன மேலாண் இயக்​குநர் தருண் மகாதேவன், என்​சிசி தலை​வர் உமா மெய்​யப்​பன், பொருளாளர் எம்​.கண்​ணன், நிர்​வாகி​கள் வள்​ளி​யம்மை பழனியப்​பன், ஆர்​.எம்​.க​திரேசன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x