Published : 17 Nov 2025 07:16 AM
Last Updated : 17 Nov 2025 07:16 AM

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் பெரிதும் வரவேற்கத்தக்கவை: பிரதமர் மோடிக்கு ‘சைமா’ தொழில் அமைப்பு நன்றி

கோவையில் இயங்கி வரும் நூற்பாலை. (கோப்பு படம்)

கோவை: அமெரிக்க வரி விதிப்பு நெருக்​கடியை எதிர்​கொள்ள ரிசர்வ் வங்கி அறி​வித்​துள்ள சலுகைகளுக்​காக, பிரதமர் நரேந்​திர மோடிக்கு தென்​னிந்​திய மில்​கள் சங்​கம் (சை​மா) நன்றி தெரி​வித்​துள்​ளது. மேலும், நூற்​பாலைகள், விசைத்​தறி, சாய ஆலைகளுக்​கும் வரிச் சலுகையை பரிந்​துரைக்​கு​மாறு கோரிக்கை விடுத்​துள்​ளது.

இந்​தி​யப் பொருட்​கள் இறக்​கும​திக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்​தர​விட்​டார். இந்த நடவடிக்​கை​யால் இந்​தி​யா​வில் ஜவுளித் தொழில் ஏற்​றும​தி​யாளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

வரி விதிப்பு உத்​தரவு 3 மாதங்​கள் கடந்த நிலை​யில், இதனால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியை எதிர்​கொள்ள சலுகைகள் அறிவிக்​கு​மாறு மத்​திய அரசுக்கு பல்​வேறு தொழில் அமைப்​பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்​தனர். இந்​நிலை​யில், ரிசர்வ் வங்கி சலுகைகள் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளதற்கு தொழில் துறை​யினர் வரவேற்​புத் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து தென்​னிந்​திய மில்​கள் சங்​கத் (சை​மா) தலை​வர் துரை.பழனிச்​சாமி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்கா​வுக்கு சுமார் ரூ.1 லட்​சம் கோடி வரை ஏற்​றுமதி செய்​து​வந்த இந்​திய ஜவுளி உற்​பத்​தி​யாளர்​கள், இந்​திய ஏற்​றும​திப் பொருட்​கள் மீது திடீரென அமெரிக்கா அறி​வித்த 50 சதவீத வரி விதிப்பு காரண​மாக பெரிதும் பாதிக்​கப்​பட்டு வந்​தனர்.

வரலாற்​றிலேயே முதல்​முறை​யாக உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டு, பல லட்​சம் தொழிலா​ளர்​கள் தற்​காலிக​மாக வேலை இழக்​கும் நிலை ஏற்​பட்​டது. மேலும், கடன் மற்​றும் வட்​டியை​யும் செலுத்த முடி​யாமல் தொழில்​துறை​யினர் கடும் நிதி நெருக்​கடியை எதிர்​கொண்டனர். இந்​தப் பிரச்​சினையை சமாளிக்க, ஓராண்​டுக்கு கடனை திரும்​பச் செலுத்த காலஅவ​காச​மும், 30 சதவீத கூடு​தல் கடனை​யும் வழங்​கு​வதுடன், ஏற்​றுமதி சலுகை​யை​யும் வழங்க ஜவுளித் துறை​யினர் வேண்​டு​கோள் விடுத்து வந்​தனர்.

இந்​நிலை​யில், இந்​திய ரிசர்வ் வங்கி வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், செப்​டம்​பர் 1 முதல் டிசம்​பர் 31-ம் தேதி வரை செலுத்த வேண்​டிய கடன் மற்​றும் வட்​டியைசெலுத்த, ஆயத்த ஆடை மற்​றும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்​கள் ஏற்​றும​தி​யாளர்​களுக்கு காலஅவ​காசம் வழங்​கப்​படும் என்று தெரி​வித்​துள்​ளது.

இது ஆயத்த ஆடை மற்​றும் வீட்டு உபயோக ஜவுளி ஏற்​றும​தி​யாளர்​கள் நிதி நெருக்​கடியை எதிர்​கொள்ள பெரிதும் உதவும். இதற்​காக பிரதமர் மோடி, மத்​திய அமைச்​சர்​கள் பியூஷ் கோயல், நிர்​மலா சீதா​ராமன், கிரி​ராஜ் சிங் ஆகியோ​ருக்கு நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறோம். ரிசர்வ் வங்கி அறி​வித்​துள்ள சலுகைகளை நூற்​பாலைகள், விசைத்​தறிகள் மற்​றும் சாய ஆலைகளுக்​கும் பரிந்​துரைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x