Published : 14 Nov 2025 09:15 AM
Last Updated : 14 Nov 2025 09:15 AM

ஏற்​றும​தி​யை ஊக்குவிக்க ரூ.45 ஆயிரம் கோடி​யில் திட்​டம்: பிரதமர் மோடி, அமைச்​சர் அமித் ஷா பாராட்டு

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற மத்​திய அமைச்​சரவை கூட்​டத்​தில், ஏற்​றும​தி​யாளர்​களை ஊக்​கு​விப்​ப​தற்​காக ரூ.45 ஆயிரம் கோடி மதிப்​பிலான 2 திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

இதன்​படி, ரூ.25,060 கோடி மதிப்​பிலான ஏற்​றுமதி வளர்ச்சி திட்​டம் செயல்​படுத்​தப்​படும். 2025-26 முதல் 2030-31 வரையி​லான காலத்​துக்கு சர்​வ​தேச வர்த்​தகத்​தில் இந்​தி​யா​வின் போட்​டித் தன்​மையை அதி​கரிக்க இந்த திட்​டம் வகை செய்​கிறது.

இது த​விர, ஏற்​றும​தி​யாளர்​களுக்​கான கடன் உத்​தர​வாத திட்​டத்தை (சிஜிஎஸ்இ) விரிவுபடுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்க அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. குறு, சிறு, நடுத்தர நிறு​வனங்​கள் (எம்​எஸ்​எம்இ) மற்​றும் எம்​எஸ்​எம்இ அல்​லாத ஏற்​றும​தி​யாளர்​களுக்கு 100% ஈட்​டுப் பிணை​யம் இல்லாமல் கடன் வழங்க இந்த திட்​டம் வகை செய்​கிறது.

இதுகுறித்து பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​திய தயாரிப்​பு​கள் உலக சந்​தை​யில் சத்​த​மாக எதிரொலிப்​பதை உறுதி செய்ய ஏற்​றுமதி வளர்ச்சி திட்​டத்​துக்கு அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதன்​மூலம் ஏற்​றும​தி​யாளர்​களின் போட்​டித் தன்மை அதி​கரிக்​கும். எம்​எஸ்​எம்இ, முதல் முறை ஏற்​றும​தி​யாளர்​கள் பயனடை​வார்​கள். இது​போல கடன் உத்​தர​வாத திட்​டம் சுய​ சார்பு இந்​தியா கனவை நனவாக்க ஊக்​கமளிக்​கும்” என கூறப்​பட்​டுள்​ளது.

மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​திய தயாரிப்​பு​களை உலகம் முழு​வதும் கொண்​டு​போய் சேர்க்க வேண்​டும், இளைஞர்​களுக்கு வேலை வாய்ப்பை அதி​கரிக்க வேண்​டும் என்​பது பிரதமர் மோடி​யின் தொலைநோக்கு பார்வை ஆகும். இந்த இலக்கை எட்​டு​வதற்​கான உறு​தி​யானநடவடிக்​கை​யாக, ஏற்​றும​தி​யாளர்​களை ஊக்​குவிக்​கும் 2 திட்​டங்​களுக்கு ஒப்​புதல்​ வழங்​கப்​பட்​டுள்​ளது" என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x