Published : 12 Nov 2025 04:27 AM
Last Updated : 12 Nov 2025 04:27 AM

மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் துறைகளில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற திட்டம்: ஜெர்மன் அமைச்சர்

சென்னை: செமிகண்​டக்​டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்​ரானிக்ஸ் துறை​களில்தமிழக அரசுடன் இணைந்து கவனம் செலுத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக ஜெர்​மன் அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார். தென்​னிந்​திய வர்த்தக சபை மற்​றும் ஜெர்​மனி​யின் சாக்​சனி மாநில அரசு சார்​பில் ‘தமிழ்​நாடு - சாக்​சனி இடையி​லான வணிக மாநாடு - 2025’ சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சாக்​சனி மாநிலத்​தின் பொருளா​தார விவ​காரங்​கள் மற்​றும் எரிசக்தி துறை அமைச்​சர் டிர்க் பான்​டர், ஜெர்​மனி துணைத் ​தூதர் மைக்​கேல் ஹேஸ்​பெர், தமிழக அரசின் சிறு, குறு மற்​றும் நடுத்தர நிறு​வனங்​கள் தொழில்​துறை செயலர் அதுல் ஆனந்த் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

இந்த உயர்​மட்ட மாநாடு தமிழகம் மற்​றும் சாக்​சனி இடையி​லான தொழில் ​துறை, புது​மை, தொழில்​நுட்ப பரி​மாற்​றம் மற்​றும் எம்​எஸ்​எம்இ கூட்​டாண்​மை​களை வலுப்​படுத்​தும் நோக்​கத்​துட​னும், புதிய வணிக வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வதை​யும் நோக்​க​மாக கொண்டு நடை​பெற்​றது.

ஜெர்​மனியைச் சேர்ந்த 16 நிறு​வனங்​கள் மற்​றும் 200-க்​கும் மேற்​பட்ட தொழில்​துறை பிர​தி​நி​தி​கள் இதில் கலந்​து​கொண்​டனர். மாநாட்​டில் தமிழக அரசு செயலர் அதுல் ஆனந்த் பேசும்​போது, “மரபு​சாரா எரிசக்​தி, காற்​றாலை மின்​சா​ரம், உள்​ளிட்​ட​ வற்​றுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்டு தமிழகத்​தில் தொழில் துறைக்கு வானமே எல்​லை​யாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகம் 11 சதவீத பொருளா​தார இலக்கை எட்​டி​யுள்ள நிலை​யில், கடந்த 2 ஆண்​டு​களில் 2 ஆயிரம் தொழில் நிறு​வனங்​களுக்கு ஒற்​றைச்​சாளர முறை​யில் தமிழகத்​தில் அனு​மதி வழங்​கப்​பட்​டிருக்​கிறது. எனவே ஜெர்​மனியைச் சேர்ந்த தொழில் நிறு​வனங்​கள் தமிழகத்​தில் முதலீடு செய்​ய​லாம்” என்று அழைப்பு விடுத்​தார்.

ஜெர்மனியை முந்தும் இந்தியா: தொடர்ந்து ஜெர்​மன் அமைச்​சர் டிர்க் பான்​டர் பேசி​ய​தாவது: கடந்த 2 ஆண்​டு​களில் சாக்​சனி​யில் இருந்து தமிழகத்​துக்கு வரும் மூன்​றாவது உயர்​மட்​டக்குழு இது​வாகும். இந்த பயணத்​தில் சென்னை மற்​றும் கோவை நகரங்​களை மேலும் ஆராய்​வதற்கு ஆவலாக இருக்​கிறோம். எங்​கள் பயணத்​தின் முக்​கிய நோக்​கம் பொருளா​தார ஒத்​துழைப்​பு, வணிக வாய்ப்​பு​கள் மற்​றும் திறமை​யான பணி​யாளர்​களைக் கண்​டறிவது. அந்த வகை​யில் முதல்​கட்​ட​மாக தமிழக தொழில்​துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜாவை நேற்று முன்​தினம் (நவ.10) சந்​தித்​துப் பேசினோம்.

புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மட்​டுமின்றி தொடர்ந்து தமிழகத்​துட​னான எங்​களது உறவை வலுப்​படுத்த திட்​ட​மிட்​டு, நுண் மின்​னணு​வியல் (மைக்ரோ எலெக்ட்​ரானிக்​ஸ்), செமிகண்​டக்​டர்​கள் துறை​களி​லும், திறன் பணி​யாளர்​களி​லும் கவனம் செலுத்​தவுள்​ளோம்.

இதையொட்டி மைக்ரோ எலெக்ட்​ரானிக்ஸ் படிப்பு மற்​றும் ஆராய்ச்​சிகளில் சென்னை ஐஐடி​யுடன் இணைந்து ஜெர்​மனி​யின் டிரெஸ்​டன் மற்​றும் ஃப்​ரைபெர்க் தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகங்​கள் பணி​யாற்றி வரு​கின்​றன. இந்​தியா ஏற்​கெனவே உலகின் 4-வது பெரிய பொருளா​தார நா​டாக உள்​ளது, விரை​வில் அது ஜெர்​மனியை முந்​தி​விடும். இதை நாங்​கள் வரவேற்​கிறோம், ஏனெனில் நாம் ஒன்​றாக வளர விரும்​பு​கிறோம்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x