Published : 07 Nov 2025 08:43 AM
Last Updated : 07 Nov 2025 08:43 AM

ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்

புதுடெல்லி: இந்​தி​யா​வின் சிறந்த முன்​னணி தொழில​திபர்​கள் 2025-ல் வழங்​கிய ஒட்​டுமொத்த நன்​கொடை ரூ.10,380 கோடியை தாண்​டி​யுள்​ள​தாக எடல்​கிவ் ஹூருண் இந்​தியா தொண்டு நிறு​வனங்​கள் பட்​டியல் 2025-ல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் சிறந்த முன்​னணி தொழில​திபர் கொடை​யாளர்​கள் 191 பேர் கொண்ட பட்​டியலில் 12 பேர் புதி​தாக இணைந்​தவர்​கள். கடந்த மூன்று ஆண்​டு​களில் ஒட்​டுமொத்த நன்​கொடை 85% அதி​கரித்​துள்​ளது.

எச்​சிஎல் டெக்​னாலஜீஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்​றும் அவரது குடும்​பத்​தார் நன்​கொடை​யாளர் பட்​டியலில் முதலிடத்​தில் உள்​ளனர். இவர்​களது ஆண்டு நன்​கொடை ரூ.2,708 கோடி​யாக உள்​ளது. கடந்த ஐந்து ஆண்​டு​களில் நான்​காவது முறை​யாக அதி​கம் நன்​கொடை கொடுத்​தவர்​களது பட்​டியலில் ஷிவ் நாடாரின் பெயர் இடம்​பெற்​றுள்​ளது.

இதையடுத்​து, முகேஷ் அம்​பானி மற்​றும் அவரது குடும்​பம் ரூ.626 கோடியை தொண்டுப் பணி​களுக்​காக செல​விட்​டுள்​ளது. இது, கடந்​தாண்டை விட 54 சதவீதம் அதி​கம். பஜாஜ் குடும்​பம் ரூ.446 கோடியை நன்​கொடையாக வழங்​கி​யுள்​ளது. இது, கடந்​தாண்​டுடன் ஒப்​பிடும்​போது 27 சதவீதம் அதி​க​மாகும். தொழில​திபர் குமார் மங்​கலம் பிர்லா மற்​றும் அவரது குடும்​பத்​தார் நன்​கொடை பட்​டியலில் நான்​காவது இடத்​தில் உள்​ளனர். இவர்​கள் ரூ.440 கோடியை சுகா​தார மற்​றும் சமூகப் பணி​களுக்​காக வழங்​கி​யுள்​ளனர். இது, கடந்​தாண்டை விட 32 சதவீதம் அதி​க​மாகும்.

ரூ.386 கோடி நன்​கொடை​யுடன் இந்த பட்​டியலில் 5-வது இடத்​தில் கவுதம் அதானி மற்​றும் அவரது குடும்​பம் உள்​ளது. கடந்​தாண்டை விட 17 சதவீதம் இவர் அதி​க​மாக நன்​கொடை வழங்​கி​யுள்​ளார்.

நந்​தன் நில​கேனி (ரூ365 கோடி), ஹிந்​துஜா குடும்​பம் (ரூ.298 கோடி), ரோகிணி நில​கேனி (ரூ.204 கோடி), சுதிர் அண்ட் சமீர் மேத்தா (ரூ.189 கோடி), சைரஸ் அண்ட் ஆதார் பூனா​வாலா (ரூ.173 கோடி) ஆகியோர் பட்​டியலில் அடுத்​தடுத்த இடங்​களில் உள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x