Published : 07 Nov 2025 08:22 AM
Last Updated : 07 Nov 2025 08:22 AM

வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேச வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

மும்பை: ஊழியர்​கள் உள்​ளூர் மொழி​யில் பேசுவதை வங்​கி​கள் உறுதி செய்ய வேண்​டும் என மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

மும்​பை​யில் நடை​பெற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்​தி​யா​வின் 12வது வங்கி மற்றும் பொருளா​தார மாநாட்​டில் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கலந்து கொண்டு பேசி​ய​தாவது:

பொதுத்​துறை வங்​கி​களில் ஊழியர்​கள் மற்​றும் வாடிக்​கை​யாளர்​கள் இடையே ஏற்​படும் மொழிப் பிரச்​சினை பெரும் சர்ச்​சை​யாகி வரு​கிறது. பெங்​களூரில் உள்ள வங்கி மேலா​ளர் ஒரு​வர் வாடிக்​கை​யாள​ருடன் கன்னட மொழியில் பேச மறுத்​ததற்கு மாநில முதல்​வரே கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதனால் அந்த அதி​காரி வேறு இடத்​துக்கு மாற்​றப்​பட்டு வங்கி மன்​னிப்பு கேட்​கும் நிலை உரு​வானது. வங்​கி​களில் வேறு மாநிலங்​களைச் சேர்ந்த ஊழியர்​கள் பணி​யாற்​று​வ​தால், அவர்​கள் வாடிக்​கை​யாளர்​களு​டன் மொழிப் பிரச்​சினையை சந்​திக்க வேண்​டி​யுள்​ளது. இது வங்​கிக்​கும், வாடிக்​கை​யாளர்​களுக்​கும் இடையே தகவல் தொடர்பு இடைவெளியை ஏற்​படுத்​தி​விடு​கிறது.

அனைத்து பணி​களை​யும் டிஜிட்​டல் முறை​யில் செய்​து​விடலாம், வாடிக்​கை​யாளர்​களை ஆன்​லைன் மூலம் தொடர்பு கொண்​டு​விடலாம் என கூற முடி​யாது. வாடிக்​கை​யாளர்​களு​டன் உள்ள நேரடி தொடர்​பு​தான் இந்​திய வங்​கி​களின் பலம்.

வாடிக்​கை​யாளர்​கள் தங்​கள் சொந்த மொழி​யில் பேசுவதை வங்​கி​கள் உறுதி செய்ய வேண்​டும். வாடிக்​கை​யாளர்​களு​டன் நீங்​கள் தொடர்பு கொள்ள மொழி முக்​கிய​மானது. அவர்​களுக்கு ஆங்​கிலம் மற்​றும் இந்தி தெரிந்​தா​லும், அவர்​களின் சொந்த மொழி​யில் வங்கி ஊழியர்​கள் பேசி​னால் அது இன்​னும் சிறப்​பான​தாக இருக்​கும். இவ்​வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x