Published : 31 Oct 2025 08:16 AM
Last Updated : 31 Oct 2025 08:16 AM
மும்பை: வெளிநாடு வாழ் இந்தியர் கள் தாயகத்தில் உள்ள தங் களது உறவினர்களுக்கு பணம் அனுப்புவதை விரைவுபடுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத் துள்ளது. இதற்கான வரைவு வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களை எளிதாக வும், வேகமாகவும், பாதுகாப் பானதாகவும் மாற்ற வேண்டும் என்பது ஜி20 திட்டத்தின் ஒரு முக்கிய இலக்காகும். பணப்பரிமாற்றத்தின் செயல் திறனை மேம்படுத்துவதையும், ஜி20 திட்டத்துடன் இணைப்ப தையும் இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து 2025, நவம்பர் 19-க்குள் வங்கிகளிட மிருந்து அதன் திட்டங்கள் மற்றும் கருத்துகளை ரிசர்வ் வங்கி வரவேற்கிறது, வெளிநாடுகளில் இருந்து நடைபெறும் பணப்பரிமாற்றங் களின் செயல்திறனை வேக மாகவும், வெளிப்படையாக வும், அதிகம் அணுகக்கூடிய தாகவும் மாற்ற வேண்டும்.
பணப் பரிமாற்றங்களின் வேகத்தை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. அதில் பயனா ளியின் வங்கியில் பணம் பெறப்பட்டதிலிருந்து பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும் வரை எடுத்துக்கொள்ளும் நேரம் முக்கியமாகும். இந்நிலையில், பயனாளி வங்கியில் செயல் முறைகளை ஒழுங்குபடுத்துவது, பணம் செலுத்தும் தகவல் மற்றும் பயனாளியின் கணக்கில் வரவுவைப்பதை சரியான நேரத்தில் தெரிவிப்பதை உறுதி செய்வது ஆகியவை சிறந்த தீர்வாக அமையும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT