Published : 29 Oct 2025 12:30 AM
Last Updated : 29 Oct 2025 12:30 AM
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அதாவது, பவுனுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.88,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த மாதம் தொடக்கத் தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்து வந்தது. அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஓரிரு நாட்களில் பவுன் ரூ.1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விலை குறைந்து, ரூ.96,000-க்கு விற்கப்பட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இதற்கிடையில், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்ததால், தங்கம் விலை இறங்கியது.
இந்நிலையில், சென்னையில் ஒரு பவுன் நேற்று ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.3,000 குறைந்து, ரூ.88,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் பவுனுக்கு ரூ.1,200-ம், மாலையில் ரூ.1,800-ம் குறைந்தது. கடந்த 8 நாட்களில் பவுனுக்கு ரூ.7,400 வரை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.11,075-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.96,648 ஆக இருந்தது. இதேபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.165 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,65,000 ஆகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT