Published : 26 Oct 2025 07:03 AM
Last Updated : 26 Oct 2025 07:03 AM

ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு 

புதுடெல்லி: ​முதலீடு தொடர்​பான முடி​வில் வெளி​யாட்​களின் தலை​யீடு இருப்​ப​தாக ‘தி வாஷிங்​டன் போஸ்ட்’ கட்​டுரை வெளி​யிட்​டிருப்​பது அடிப்​படை ஆதா​ரமற்​றது என எல்​ஐசி மறுப்பு தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் ‘தி வாஷிங்​டன் போஸ்ட்’ ஒரு கட்​டுரை வெளி​யிட்​டுள்​ளது. அதில், “கடந்த மே மாதத்​தில் எல்​ஐசி நிறு​வனம் அதானி குழும நிறு​வனத்​தில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி முதலீடு செய்​தது.

இதில் வெளி​யாட்​களின் தலை​யீடு உள்​ளது. இது தொடர்​பான திட்​டத்தை இந்​திய அரசின் உயர் அதி​காரி​கள் விரைவுபடுத்தி உள்​ளனர்" என கூறப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக எல்​ஐசி நேற்று வெளி​யிட்ட மறுப்பு அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: எல்​ஐசி​யின் முதலீடு தொடர்​பான முடிவு​களில் வெளிப்​புற காரணி​கள் தலை​யிட்​ட​தாக தி வாஷிங்​டன் போஸ்ட் கட்​டுரை வெளி​யிட்​டுள்​ளது. இந்த குற்​றச்​சாட்டு தவறானது, ஆதா​ரமற்​றது மற்​றும் உண்​மைக்கு முற்​றி​லும் மாறானது. அந்​தக் கட்​டுரை​யில் கூறி​யிருப்​பது போல, அதானி குழும நிறு​வனங்​களில் முதலீடு செய்​வதற்​கான எந்த ஆவணமோ அல்​லது திட்​டமோ எல்​ஐசி​யால் இது​வரை தயாரிக்​கப்​பட​வில்​லை.

மத்​திய அரசின் நிதி சேவை​கள் துறை அல்​லது வேறு எந்த அமைப்​புக்​கும் இத்​தகைய முடிவு​களில் எந்​தப் பங்​கும் இல்​லை. எல்​ஐசி தனது அனைத்து முதலீட்டு முடிவு​களி​லும் மிக உயர்ந்த அளவி​லான கவனத்​தை​யும் பொறுப்​பை​யும் கடைபிடித்​துள்​ளது. அனைத்து முடிவு​களும் நடை​முறை​யில் உள்ள கொள்​கைகள், சட்ட விதி​முறை​கள் மற்​றும் ஒழுங்​கு​முறை வழி​காட்​டு​தல்​களுக்கு ஏற்ப, அனைத்து தரப்​பினரின் நலனை கருத்​தில் கொண்டு எடுக்​கப்​பட்​டுள்​ளன. எல்​ஐசி​யின் புகழுக்​கும் இந்​தி​யா​வின் வலு​வான நிதித் துறை அடித்​தளத்​துக்​கும் களங்​கம் ஏற்​படுத்​தும் நோக்​கத்​துடன் இந்த கட்​டுரை வெளி​யிடப்​பட்​டுள்​ள​தாக தோன்​றுகிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x