Published : 20 Oct 2025 07:46 AM
Last Updated : 20 Oct 2025 07:46 AM

தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்: சென்னையில் ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அமோகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு, புத்தாடைகள் விற்பனை நேற்று களைகட்டியது. தாம்பரம் சண்முகம் சாலையில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

சென்னை: தீ​பாவளி பண்​டிகை இன்று நாடு​முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​படு​கிறது. புத்​தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து இனிப்பு வழங்கி வீடு​தோறும் தீபம் ஏற்றி வைத்து பண்​டிகையை மக்​கள் கொண்​டாடினர். இதை முன்​னிட்டு சென்​னை​யில் ஜவுளி, பட்​டாசு மற்​றும் வீட்டு உபயோகப் பொருட்​களின் விற்​பனை அமோக​மாக நடந்​தது.

தீபாவளி பண்​டிகை என்​றாலே, துணிக்​கடைகள் அதி​கம் உள்ள சென்​னை​யின் முக்​கிய கடை வீதி​களில் கூட்ட நெரிசல் இயல்​பாகவே அதி​கரித்து விடும். அந்​தவகை​யில், தீபாவளிக்கு முந்​தைய நாளான நேற்​று, சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் உள்ள ஜவுளி கடைகளில் காலை முதலே மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலை​யிலும், நேற்று விடு​முறை நாள் என்​ப​தால் மக்​கள் தங்​களது குடும்​பத்​தினருடன் ஜவுளி கடைகள், பட்​டாசு கடைகளை நோக்கி படையெடுத்​தனர்.

சென்​னை​யில் தி.நகர், புரசை​வாக்​கம், வண்​ணாரப்​பேட்​டை, சவுக்​கார்​பேட்​டை, பெரம்​பூர், பாரி​முனை உள்​ளிட்ட முக்​கிய கடை வீதி​களில் மக்​கள் குடை பிடித்​த​படியே ‘ஷாப்​பிங்’ செய்​தனர். துணி​கள், நகைகள், குழந்​தைகளுக்​கான விளை​யாட்​டுப் பொருட்​கள், வீட்டு உபயோகப்​பொருட்​கள் என அனைத்​து​வித பொருட்​களும் ஒரே இடத்​தில் வாங்க பலரும் தி.நகரிலே குவிந்​த​தால் அப்​பகு​தி​யில் திரும்​பிய திசையெல்​லாம் மனித தலைகளாகவே காணப்​பட்​டன.

மேலும் நேற்று கடைசி நேர விற்​பனை என்​ப​தால், சிறிய ஜவுளி கடைகளில், ஏராள​மான புதிய ரக ஆடைகள் பல விற்று தீர்ந்​தன. தீபாவளி ஆஃபரில் வீட்டு உபயோக பொருட்​களை வாங்​கு​வ​தி​லும் மக்​கள் ஆர்​வம் காட்​டினர். தீபாவளியை முன்​னிட்டு பல்​வேறு சலுகைகள் வழங்​கப்​பட்​ட​தால், சென்​னை​யின் பல பகு​தி​களில் இருசக்கர வாக​னம் மற்​றும் செல்​போன்​களின் விற்​பனை​யும் அமோக​மாக நடந்​தது.

இது​மட்​டுமில்​லாமல், சாலை​யோர கடைகளி​லும் மக்​கள் கூட்​டம் அதி​க​மாக காணப்​பட்​டது. கம்​மல், வளை​யல், தோடு​கள், காலணி​கள், பெல்ட்​டு​கள் விற்​பனை ஜோராக நடை​பெற்​றது. காவல்​துறை​யினர் தொய்​வின்றி கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். வண்​ணாரப்​பேட்டை எம்​.சி. ​சாலை​யில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட சில்​லரை மற்​றும் மொத்த ஜவுளிக்​கடைகளில் கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் கடுமை​யான போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதே​போல், போரூர், பாடி, குரோம்​பேட்டை பகுதி கடைகளி​லும் கூட்​டம் இருந்​தது.

ஜவுளிக் கடைகளை தொடர்ந்​து, இனிப்​பு, கார கடைகளில் கூட்​டம் அதி​க​மாக காணப்​பட்​டது. பட்​டாசு கடைகளை பொருத்​தவரை பட்​டாசு விற்​பனை நேற்று பல பகு​தி​களில் மந்​த​மாக​வும் பின்​னர் விறு​விறுப்​பாக​வும் நடந்​தது. சென்னை தீவுத்​திடலில் அமைக்​கப்​பட்​டிருந்த பட்​டாசு கடைகளி​லும் மக்​கள் கூட்​டம் காணப்​பட்​டது. இதே​போல், பூக்​கடைகள், நகைக் கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்​ஸ், பழக்​கடைகளி​லும் மக்​கள் கூட்​டம் அதி​க​மாகவே இருந்​தது. இதனால், சென்​னை​யில் முக்​கிய கடைவீ​தி​கள் அமைந்​துள்ள சாலைகளில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்பட்​டது.

இதனிடையே சென்​னை​யில் இருந்து இயக்​கப்​பட்ட 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட அரசு சிறப்பு பேருந்​துகள் மூல​மும் ரயில்​கள், ஆம்னி பேருந்​துகள் மூல​மும் சுமார் 8 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொந்த ஊர் சென்​றுள்​ளனர். இதுத​விர அவர​வர் சொந்த வாக​னங்​களி​லும் லட்​சக்​கணக்​கானோர் சொந்த ஊர் சென்​றுள்​ளனர்.

இதனால் ஜிஎஸ்டி சாலை​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதற்கு தீர்​வாக மாற்​றுப்​பாதை​யும் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதே​போல் தீபாவளி முடிந்து மீண்​டும் சென்னை தி்ரும்​ப​வும் உரிய போக்​கு​வரத்து வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும் தேவைக்​கேற்ப பேருந்​துகள் தடை​யின்றி இயக்​கப்​படும் என்​றும் அமைச்​சர் சிவசங்​கர் தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x