Published : 14 Oct 2025 08:58 AM
Last Updated : 14 Oct 2025 08:58 AM
புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதனால் பேச்சுவார்த்தை தடைபட்டது.
இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடியும், இந்த பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன என்று அறிவித்தார்.
கடந்த மாதம் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில் இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் (பிடிஏ) தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியக் குழுவினர் இந்த வாரத்தில் அமெரிக்கா செல்லவுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT