Published : 09 Oct 2025 01:28 AM
Last Updated : 09 Oct 2025 01:28 AM

இந்திய குடும்பங்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்: ஜெரோதா சிஇஓ நிதின் காமத் வலியுறுத்தல்

பெங்களூரு: பங்​குத் தரகு நிறு​வன​மான ‘ஜெரோ​தா' சிஇஓ நிதின் காமத் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறியிருப்பதாவது.

இந்​திய குடும்​பங்​களிடம் சுமார் 3 லட்​சம் கோடி டாலர் (உலக தங்க கவுன்​சில் மதிப்​பீடு) மதிப்​பிலான தங்​கம் உள்​ளது. அவை பயன்​பாடு இல்​லாமல் முடங்​கிக் கிடக்​கின்​றன. இதற்​கிடையே, பங்கு முதலீடு​கள், வளர்ச்​சிக்கு மூலதனம் தேவைப்​படும் நிறு​வனங்​களுக்கு நிதி வழங்​கு​கின்​றன. எனவே, தங்க கடன்​களைத் தாண்​டி, இந்த தங்​கத்தை பொருளா​தார வளர்ச்​சிக்கு ஆக்கப்பூர்வமாக பயன்​படுத்​து​வதற்​கான சிறந்த வழிகள் தேவைப்​படு​கின்​றன” என கூறி​யுள்​ளார்.

இந்​தப் பதிவுடன் தனது கருத்தை விளக்​கும் வகை​யில், 1996 முதல் 2025 வரை​யில் தங்​கம் மற்​றும் நிப்டி 500 குறி​யீட்​டின் வரு​வாயை ஒப்​பிடும் ஒரு விளக்​கப் படத்தை பகிர்ந்​துள்​ளார். உலகில் உள்ள ஒட்​டுமொத்த தங்​கத்​தில் 14% இந்​தி​யா​வில் உள்​ளது.

இதில் இந்​திய குடும்​பங்​களிடம் மட்​டும் சுமார் 25 ஆயிரம் டன் தங்​கம் இருக்​கிறது. இதன் மதிப்பு நாட்​டின் ஜிடிபி​யில் 56% ஆகும். உலகில் தங்​கத்தை அதி​கம் வைத்​திருக்​கும் அமெரிக்​கா, ஜெர்​மனி, சீனா, ரஷ்யா உள்​ளிட்ட முதல் 10 நாடு​களிடம் உள்ள கையிருப்​பை​விட இந்​திய குடும்​பங்​களிடம் உள்ள இருப்பு அதி​கம் என எச்​எஸ்​பிசி குளோபல் சமீபத்​தில் தெரி​வித்​திருந்​தது. கடந்த ஆண்டு டிசம்​பர் மாத நில​வரப்​படி, இந்​திய ரிசர்வ் வங்​கி​யிடம் 876.18 டன் தங்​கம்​ இருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x