Published : 04 Oct 2025 09:49 AM
Last Updated : 04 Oct 2025 09:49 AM

எஸ்யுவி, சேடன் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கும் மிச்செலின் நிறுவனம்

சென்னை: மிச்​செலின் நிறு​வனம் கார்​களுக்​கான உயர்ரக டயர்​களை முதல்​முறை​யாக இந்​தி​யா​விலேயே தயாரித்​திருக்​கிறது. இவை அடுத்த ஆண்​டில் விற்​பனைக்கு வரும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. வாக​னங்​களுக்​கான டயர் விற்​பனை​யில் சிறந்து விளங்​கும் முன்​னணி நிறு​வன​மான மிச்​செலின் இந்​தியா நிறு​வனம் தற்​போது எஸ்​யு​வி, சேடன் கார்​களுக்​கான உயர்ரக டயர்​களை முதல்​முறை​யாக இந்​தி​யா​விலேயே தயாரித்​து, அறி​முகம் செய்​துள்​ளது.

இது தொடர்​பாக அந்​நிறு​வனத்​தின் இந்​திய பிரிவு தலை​வர் விட்​டோர் சில்​வா, மேலாண்மை இயக்​குநர் சாந்​தனு தேஷ்​பாண்​டே,மிச்​செலின் சென்னை ஆலை இயக்​குநர் புளோரன்ட் சாசேட் ஆகியோர் கும்​மிடிப்​பூண்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் 10 ஆண்​டு​களுக்கு முன்பு 900 கிமீ விரைவுச் சாலை மட்​டுமே இருந்​தது. இன்​றைக்கு 5 ஆயிரம் கிமீ மேல் விரைவுச் சாலைகள் அமைக்​கப்​பட்​டிருக்​கின்​றன. 2030-ம் ஆண்​டுக்​குள் விரைவுச் சாலைகள் 16 ஆயிரம் கி.மீட்​டரை கடந்​திருக்​கும். இவை நகரங்​களுக்கு இடையே​யான தொலைவை குறைக்​கின்​றன.

உதா​ரண​மாக சென்​னை​யில் இருந்து பெங்​களூருக்கு செல்​வதற்கு 7 மணி நேர​மாகும் நிலை​யில், விரை​வில் பெங்​களூரு​வுக்கு வெறும் 2 மணி நேரத்​தில் சென்​றடை​யும் வகை​யில் சாலை வசதி ஏற்​படுத்​தப்பட உள்​ளது. அதே​போல் டெல்​லியி​லிருந்து மும்​பைக்கு சாலை வழி​யாகச் செல்ல 24 மணி நேர​மான நிலை​யில் தற்​போது 12 மணி நேர​மாக குறைக்​கும் வகை​யில் சாலை விரை​வில் திறக்​கப்​பட​வுள்​ளது.

இது​போன்ற மாற்​றம் இந்​தியா முழு​வதும் தற்​போது நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் பெரிய, பாது​காப்​பான உயர்ரக வாக​னங்​கள் அதி​கள​வில் இந்​தி​யா​வில் விற்​பனை​யாகி வரு​கின்​றன. இந்​தி​யா​வில் கடந்த ஆண்டு விற்​பனை​யான கார்​களில் 50 சதவீதம் எஸ்​யுவி வகை கார்​கள்​தான். 2030-ம் ஆண்​டுக்​குள் எஸ்​யுவி கார்​கள் இந்​தி​யாவை முழு​வது​மாக ஆக்​கிரமித்​து​விடும். பாது​காப்​பாக​வும், வேக​மாக​வும் ஓர் இடத்​துக்கு செல்​வதற்கு இந்த கார்​கள் உகந்​தவை. இக்​கார்​களுக்​கான டயர்​கள் பாது​காப்பை உறுதி செய்​கின்​றன.

எஸ்​யூ​வி, சேடன் போன்ற கார்​களுக்​கான உயர்ரக டயர்​கள் (16 முதல் 22 இன்ச் வரையி​லானவை) முன்பு இறக்​குமதி செய்​யப்​பட்டு வந்த நிலை​யில், தற்​போது இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக மிச்​செலின் நிறு​வனம் தயாரித்​திருக்​கிறது. இந்த டயர்​களில் பயன்​படுத்​தப்​பட்​டுள்ள நவீன தொழில்​நுட்​பம் காரண​மாக இவை நீண்​ட​காலம் நிலைத்​திருக்​கும் தன்மை கொண்​ட​வை.

கார்​பன் வெளி​யிடும் குறை​வாக இருக்​கும். இவை அடுத்த ஆண்​டில் பயன்​பாட்​டுக்கு வரவிருக்​கின்​றன. இதற்​காக கடந்த ஆண்டு கும்​மிடிப்​பூண்​டி​யில் மிச்​செலின் டயர் உற்​பத்தி ஆலை ரூ.2,800 கோடி முதலீட்​டில் 225 ஏக்​கர் பரப்​பள​வில் ஆரம்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த ஆலை 54 ஆயிரம் டன் ரப்​பரை பயன்​படுத்தி டயர்​களை உற்​பத்தி செய்​யும் திறன் கொண்​டது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x