Published : 04 Oct 2025 06:20 AM
Last Updated : 04 Oct 2025 06:20 AM

கலைவாணர் அரங்கில் 15 நாட்கள் தேசிய கைத்தறி கண்காட்சி: 50 சதவீதம் தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை

கைத்தறித் துறை சார்பில் தேசிய கைத்தறி கண்காட்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. 15 நாள் நடைபெறும் கண்காட்சியை பெண்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு புடவைகளை வாங்கிச் செல்கின்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: தீ​பாவளியை ஒட்டி கலை​வாணர் அரங்​கில் 15 நாட்​கள் நடை​பெற உள்ள தேசிய கைத்​தறி கண்​காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்​காட்​சி​யில் 50 சதவீதம் தள்​ளு​படி​யில் பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. கைத்​தறி துணி வகை​களின் விற்​பனையை அதி​கரிப்​ப​தற்கு கைத்​தறி துறை​யால் தேசிய கைத்​தறி கண்​காட்​சியை சென்னை கலை​வாணர் அரங்​கில் அமைச்​சர்​கள் ஆர்​.​காந்​தி, பி.கே.சேகர்​பாபு, மா.சுப்​பிரமணி​யன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்​தனர்.

தொடர்ந்து இந்த கண்​காட்​சி​யில், கைத்​தறி நெச​வாளர்​களின் கைவண்​ணங்​களால் தனித்​து​வத்​துடன் நெசவு செய்​யப்​பட்ட பேஸ்டல் கலெக் ஷன்​ஸ், பூம்​பட்​டு, புது​மணப்​பட்​டு, பட்டு நூல் டிசைனர் சேலைகள், கட்​டம் பட்​டு, வெண்​ணிலா கலெக் ஷன்​ஸ், அனு​தினப்​பட்​டு, பருத்தி நூல் யோகா மேட், தர்ப்பை புல் யோகா மேட், தாய்​-சேய் பெட்​டகம் போன்ற புதிய வடிவ​மைப்பு ரகங்​களை அறி​முகம் செய்து விற்​பனையை அமைச்​சர்​கள் தொடங்கி வைத்​தனர்.

இக்​கண்​காட்​சி​யில் கைத்​தறி துறை​யின் கீழ் இயங்கி வரும் 300-க்​கும் மேற்​பட்ட கைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​களும், வெளி மாநில தலைமை நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​களு​டன் மத்​திய, மாநில சிறப்பு முகமை நிறு​வனங்​களும் பங்கு பெற்றுள்ளன.

ஆர்கானிக் சேலைகள்: மேலும், இதில் உலகப் பிரசித்தி பெற்ற காஞ்​சிபுரம் பட்​டு, திரு​புவனம் பட்​டு, ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்​பட்டு வேட்​டிகள், அருப்​புக்​கோட்​டை, நெகமம், செட்​டி​நாடு, கோரா காட்​டன், செடிபுட்​டா, மதுரை சுங்​குடி, கூரை​நாடு, காஞ்சி காட்​டன், பரமக்​குடி புதினம் மற்​றும் ஆர்​கானிக், டை–டை சேலைகள், மென்​பட்டு சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்​ளன.

அதே​போல், சென்​னிமலை பெட்​சீட், கரூர் பெட்​சீட் மற்​றும் ஏற்​றுமதி ரகங்​களும் விற்​பனைக்கு வைக்​கப்​பட்​டுள்​ளன. இத்​துடன் வெளி மாநிலங்​களின் பிரசித்தி பெற்ற பனா​ராஸ், டசர், பைத்​தானி, போச்​சம்​பள்​ளி, மைசூர் பட்டு சேலைகளும், பெங்​கால் காட்டன், வெங்​கடகிரி காட்​டன், ஒடிசா இக்​கட், சந்​தேரி, தந்​துஜா, மிருக்​னா​யினி சேலைகளும், ஜம்மு காஷ்மீர் சால்​வை​களும் விற்​பனைக்​காக காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இக்​கண்​காட்சி வரும் 17-ம் தேதி வரை தின​மும் காலை 10 மணி​முதல் இரவு 9 மணிவரை 15 நாட்​கள் கலை​வாணர் அரங்​கில் நடை​பெறும்.

50 சதவீதம் வரை தள்ளுபடி: மேலும் கண்​காட்​சி​யில் விற்​பனை செய்​யப்​படும் தமிழ்​நாடு கைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவுச் சங்​கங்​களின் கைத்​தறி ரகங்​களுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை சிறப்​புத் தள்​ளு​படி வழங்​கப்​படும் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிகழ்ச்​சி​யில் தயாநிதி மாறன் எம்​.பி. சென்னை மாநகராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, துணை மேயர் எம்​.மகேஷ் கு​மார், கைத்​தறித் துறை அரசு செயலர் வே.அ​முதவல்​லி, இயக்​குநர் மகேஸ்​வரி ரவிக்​கு​மார், கோ-ஆப்​டெக்ஸ் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் கவி​தா​ராமு மற்​றும் துறை​யின் உயர் அலு​வலர்​கள் கலந்​து​ கொண்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x