Published : 04 Oct 2025 06:39 AM
Last Updated : 04 Oct 2025 06:39 AM

இந்திய பொருளாதாரம் எதையும் தாங்கும்; ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக உயரும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற கவுடில்யா பொருளா​தார மாநாட்​டில் மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: உலகளா​விய பிரச்​சினை​கள் எல்​லாம் தீவிரம் அடைந்து வரு​கின்​றன. வரி விதிப்​பு​கள், தடைகள், பிரிக்​கும் யுக்​தி​கள் எல்​லாம் உலகளா​விய நுகர்வு சங்​கி​லியை மாற்​றியமைக்​கின்​றன. இந்த மாற்​றங்​கள் இந்​தி​யா​வின் பலவீனம் மற்​றும் வலிமை ஆகிய இரண்​டை​யும் வெளிப்​படுத்​துகிறது. மாற்​றங்​கள் மற்​றும் அதிர்​வு​களை தாங்​கும் திறனை வரவேற்​கிறோம். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது, இந்தியா மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க விரும்புகிறது என அர்த்தம் அல்ல.

வளர்ந்த நாடு என்ற இலக்கை அடைய நாம், மொத்த உள்​நாட்டு உற்​பத்​தியை 8 சதவீத​மாக உயர்த்த வேண்​டும். உள்​நாட்டு வர்த்தக நில​வரம் வலு​வாக உள்​ளது. இது உலகளா​விய வர்த்​தகத்​தில் ஏற்​பட்​டுள்ள நிச்​சயமற்​றதன்​மை​யால் ஏற்​படும் பாதிப்பை குறைக்​கும். இந்​தி​யா​வின் பொருளா​தா​ரம் எதை​யும் தாங்​கும் திறன் படைத்​தது. அது தொடர்ந்து நிலை​யாக வளரும். உலகளா​விய வர்த்​தகத்​தில் தற்​போது ஏற்​பட்​டுள்ள சூழல், நிலை​யான மற்​றும் எதிர்​பா​ராத ஒத்​துழைப்​பு​களை ஏற்​படுத்த வழி​வகுக்​கும். நமது விதியை தீர்​மானிக்​கும் முடிவு​கள் உலகில் எங்கோ எடுக்​கப்​படும்போது நாம் வெறும் பார்​வை​யாளர்​களாக மட்டும் இருக்க முடி​யாது. அதில் நாம் தீவிர பங்​காற்றி மாற்​றங்​களை ஏற்​படுத்த வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x