Published : 03 Oct 2025 07:08 AM
Last Updated : 03 Oct 2025 07:08 AM

காலை 9 டு இரவு 9 மணி; இந்தியர்களின் பணி நேரம் பாராட்டுதலுக்குரியது: ஜப்பான் ஸ்டார்ட்அப் நிறுவனர் கருத்து

பெங்களூரு: இந்​தி​யர்​கள் காலை 9 மணியி​லிருந்து இரவு 9 மணி வரை பணிபுரிவது பாராட்​டு​தலுக்​குரியது என்று ஜப்​பான் ஸ்டார்ட்​அப் மைக்​ரோபை​னான்ஸ் ஹக்கி நிறு​வனத்​தின் நிறு​வனர் ரெய்ஜி கோப​யாஷி தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: வளரும் நாடு​களில் உள்ள மக்​களுக்கு கார் வாங்​கு​வதற்​கான நிதி உதவியை ஹக்கி நிறு​வனம் வழங்கி வரு​கிறது. ஜப்​பானில் தலை​மையகத்​தைக் கொண்டு இயங்கி வரும் எங்​கள் நிறு​வனம் கென்​யா, தென்​னாப்​பிரிக்கா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யா​வில் கால்​ப​தித்​துள்​ளது.

கடந்த 2024-ம் ஆண்​டில் பெங்​களூரு​வில் ஹக்கி நிறு​வனம் செயல்பட தொடங்​கியது. இந்​தி​யா​வில் பொருளா​தா​ரம் வேக​மாக வளர்​வதற்​கான வாய்ப்​பு​கள் உள்​ளன. இங்​குள்ள மக்​களின் எனர்​ஜியை மிக​வும் விரும்​பு​கிறேன். அவர்​கள் தங்​களது எதிர்​காலத்தை பற்றி மிக​வும் நம்​பிக்​கை​யுடன் உள்​ளனர். இது, ஜப்​பானிலிருந்து வேறு​பட்​டது. ஏனெனில் ஜப்பானில் வயதானவர்​கள் அதி​கம் என்​ப​தால் அவர்​கள் எல்​லா​வற்​றி​லும் நிதான​மாக​வும், முன்​னெச்​சரிக்கை உணர்​வுடன் மட்​டுமே செயல்பட விரும்​பு​கின்​றனர். அதிக ரிஸ்க் எடுக்க விரும்​புவ​தில்​லை. ஆனால், இந்​தி​யா​வில் அதற்கு நேர்​மாறு.

குறிப்​பாக, இந்​தி​யர்​கள் காலை 9 மணியி​லிருந்து இரவு 9 மணி வரை மிக​வும் எனர்​ஜி​யுடன் பணி​யாற்​று​வதை பார்ப்​பது எனக்கு மிக​வும் பிடித்​துள்​ளது. அது மிக​வும் என்னை ஈர்த்​துள்​ளது. ஏனெனில் ஜப்​பான் பணி கலச்​சா​ரத்​துக்​கும், இந்​திய பணி கலாச்​சா​ரத்​துக்​கும் இடையே மிகப்​பெரிய வித்​தி​யாசம் உள்​ளது. இந்​தி​யா​வில் முதலீட்​டாளர்​கள் விரை​வாக முடி​வெடுத்து செயல்பட ஆரம்​பித்து விடு​கின்​றனர். அனை​வரிட​மும் நட்​புறவுடன் செயல்​படு​கின்​றனர். இவ்​வாறு கோப​யாஷி தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x