Published : 01 Oct 2025 10:38 AM
Last Updated : 01 Oct 2025 10:38 AM

நடப்பு அரையாண்டில் ரூ.995 கோடி சொத்து வரி வசூல்

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில், நடப்பு அரை​யாண்​டில் ரூ.995 கோடி சொத்து வரி வசூல் செய்​யப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் கடந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் ரூ.2,023 கோடி வரி வசூலிக்​கப்​பட்​டிருக்​கிறது. அதைத் தொடர்ந்​து, நடப்பு நிதி​யாண்​டின் (2025-26) முதல் அரை​யாண்​டுக்​கான வரி செலுத்​து​வதற்கு கடைசி நாள் நேற்​றுடன் நிறைவடைந்​தது.

அதன்​படி, ஏப்​ரல் 1-ம் தேதி​யில் இருந்து செப்​.30-ம் தேதி வரை, சென்னை மாநக​ராட்​சி​யில் ரூ.930 கோடி வரி வசூலாகி உள்​ள​தாக மாநக​ராட்சி தெரி​வித்​துள்​ளது. இதில், 75 சதவீதம் பேர் இணை​யம் மூலம் வரி செலுத்​தி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

சென்னை மாநக​ராட்​சி​யில் தற்​போது 13.50 லட்​சம் கட்​டிடங்​கள் சொத்து வரி செலுத்த வேண்​டும் என்​கிற நிலை இருந்து வரு​கிறது. இதில், 8 லட்​சம் கட்​டிடங்​களுக்கு வரி வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து நடப்பு வரு​வாய் ஆண்​டில் ரூ.2,300 கோடிக்கு மேல் வரி வசூலிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக​ மாநக​ராட்சி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x