Last Updated : 29 Sep, 2025 06:07 PM

 

Published : 29 Sep 2025 06:07 PM
Last Updated : 29 Sep 2025 06:07 PM

ஒரே நாளில் இருமுறை உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.86,000-ஐ கடந்தது!

மெட்டா ஏஐ

சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று (செப்., 29) ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்துள்ளது. அதாவது, காலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக, பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.86,160-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,700-க்கு விற்பனை ஆனது. பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.85,600-க்கு விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் இன்று மாலையும் உயர்ந்தது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,770-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.86,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்த நிலையில், தற்போது ரூ.560 அதிகரித்துள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை இன்று ஒரு கிராம் 160 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x