Published : 25 Sep 2025 01:18 AM
Last Updated : 25 Sep 2025 01:18 AM

எச்டிஎப்சி வங்கி பரிவர்தன் சமூக நல திட்டங்களால் 1.4 கோடி பேரின் வாழ்க்கையில் தாக்கம்: நுஸ்ரத் பதான் தகவல்

எச்​டிஎப்சி வங்​கி​யின் சிஎஸ்​ஆர் பிரி​வின் தலை​வர் நுஸ்​ரத் பதான்

சென்னை: இந்​தி​யா​வின் மிகப்​பெரிய தனி​யார் துறை வங்​கி​யான எச்​டிஎப்சி அதன் சமூகப் பொறுப்​புணர்வு அமைப்​பான (சிஎஸ்​ஆர்) பரிவர்​தன் மூலம் தமிழகத்​தில் 1.4 கோடி பேரின் வாழ்க்​கை​யில் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ள​தாக தெரி​வித்​துள்​ளது.

எச்​டிஎப்சி வங்​கி​யின் சிஎஸ்​ஆர் பிரி​வின் தலை​வர் நுஸ்​ரத் பதான் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் சமூகப் பொறுப்​புணர்வு திட்​டங்​களை எச்​டிஎப்சி வங்​கி​யின் பரிவர்​தன் அமைப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்​கியது. கடந்த 10 ஆண்​டு​களில் 37 மாவட்​டங்​களில் பல்​வேறு சமூக நல மேம்​பாட்டு பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

விவ​சா​யிகளுக்கு ஆதர​வளிப்​பது முதல் கல்​வி, திறன் மேம்​பாடு, உள்​கட்​டமைப்பு என அனைத்​தை​யும் வலுப்​படுத்​தும் வகை​யில் மாவட்​டம் வாரி​யாக பிரத்​யேக நடவடிக்​கையை எடுத்​துள்​ளோம். இதன் மூலம் 1.4 கோடி பேரின் வாழ்க்​கை​யில் இது​வரை தாக்​கத்தை ஏற்​படுத்தி உள்​ளோம்.

28 மாநிலங்​கள் மற்​றும் 8 யூனியன் பிரதேசங்​களில் சமூக பொறுப்பு திட்​டங்​களுக்​காக ரூ.6,173 கோடி முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளது. 300-க்​கும் மேற்​பட்ட திட்​டங்​கள் தற்​போது செயல்​பாட்​டில் உள்​ளன. எங்​களு​டன் 150 என்​ஜிஓக்​கள் கைகோத்​துள்​ளனர்.

கடந்த மார்ச் 2025 உடன் முடிவடைந்த நிதி​யாண்​டில் சிஎஸ்​ஆர் செல​வினத்​தில் இந்​தி​யா​வில் எச்​டிஎப்சி வங்கி முன்​னிலை​யில் உள்​ளது. அந்த நிதி​யாண்​டில் ரூ.1,068 கோடியை நாடு​முழு​வதும் பரிவர்​தன் திட்​டத்​தின் கீழ் சமூக நல திட்​டங்​களுக்​காக செல​விடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x