Published : 22 Sep 2025 10:15 AM
Last Updated : 22 Sep 2025 10:15 AM
சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (செப்.22) பவுனுக்கு ரூ.560 என உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.560 என உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.82,880-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ஒன்றுக்கு ரூ.90,416 என விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.68,640-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.148-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,48,000-க்கு விற்பனை ஆகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT