Last Updated : 22 Sep, 2025 10:15 AM

 

Published : 22 Sep 2025 10:15 AM
Last Updated : 22 Sep 2025 10:15 AM

புதிய உச்சம் எட்டிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.560 உயர்வு

சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (செப்.22) பவுனுக்கு ரூ.560 என உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்​ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை அதிரடி​யாக உயர்ந்​து வருகிறது.

அந்த வகையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத உச்​சத்தை எட்டியது. சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.560 என உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.82,880-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்த தங்​கம் பவுன் ஒன்றுக்கு ரூ.90,416 என விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.68,640-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.148-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,48,000-க்கு விற்பனை ஆகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x