Published : 20 Sep 2025 09:11 PM
Last Updated : 20 Sep 2025 09:11 PM
மும்பை: அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு வெள்ளிக்கிழமை அன்று பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டது. அதன் பலனை அதானி குழுமத்தின் நிறுவன தலைவரான கவுதம் அதானி அறுவடை செய்துள்ளார்.
அவரது சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.299 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கவுதம் அதானி. 63 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 87.4 பில்லியன் டாலர்கள்.
இந்த சூழலில் அதானி குழுமத்தில் மோசடி அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எதுவும் நடைபெறவில்லை என்பதைக் குறிப்பிட்டு, அதானி குழுமத்திற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நிராகரித்துள்ளது.
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு குற்றம் சாட்டியது. அதையடுத்து அதானி குழும பங்குகளின் விலை மற்றும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்தது. இந்நிலையில், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என செபி கூறியது. இதை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகளின் விலை உயர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT